வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தைத்தொடர்ந்து இயக்குனர் சுந்தர்.சி இயக்கிக் கொண்டிருக்கும் படம் “ஆக்ஷன்”. இப்படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்க, தமன்னா கதாநாயகியாக நடிக்கிறார். மத கஜ ராஜா மற்றும் ஆம்பள படங்களைத் தொடந்து இயக்குனர் சுந்தர்.சி மற்றும் நடிகர் விஷால் இணையும் மூன்றாவது படம் இந்த
Uncategorized
இந்தியாவிலேயே முதன்முறையாக அகண்ட திரைகொண்ட பார்வையாளர்களை திரையோடு ஒன்றச் செய்யும் புதிய அனுபவத்தை தரவல்ல எபிக் என்ற திரையரங்கை அறிமுகப்படுத்துகிறது க்யூப் சினிமா நிறுவனம். இந்தியாவின் முதலாவது எபிக் திரை, தெற்காசியாவின் மிகப்பெரிய எபிக் திரை என்ற சிறப்பம்சத்தோடு ஆந்திரப்பிரதேச மாநிலம், சூலூர்பேட்டையில் “வி எபிக்” என்ற திரையரங்கு உருவாக்கப்பட்டுள்ளது. சாஹோ
அபிஹசன். (ஹாசன் அல்ல ஹசன்) கமல் தயாரிப்பு விக்ரம் கதாநாயகன் ஆகிய சிறப்புகளைக் கொண்ட கடாரம் கொண்டான் முதல்படமாக அமைந்த அதிர்ஷ்டசாலி. கடாரம் கொண்டான் படத்தில் அக்ஷராஹாசனின் கணவராக நடித்த புதுமுக நாயகன் அபிஹசன்,2012 ஆம் ஆண்டு நடிகர் நாசர் இயக்கத்தில் வெளியான சுன் சுன் தாத்தா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அனைவரையும் கவர்ந்தவர். அந்த அபிதான் வளர்ந்து
எச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடித்த நேர் கொண்ட பார்வை படம் ஆகஸ்ட் எட்டாம் தேதி வெளியானது. வெளிவருமுன்பே பரவலான வரவேற்பு விமர்சனங்களை அப்படம் பெற்றிருந்தது. பெண்களுக்கெதிரான பாலியல் சீண்டல்களையும் குற்றங்களையும் கடுமையாக எதிர்க்கக் கூடிய கருத்து கொண்ட படமாக இருந்ததால் திரையுலகினர் பலரும் இப்படத்துக்கு வரவேற்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் படம் வெளியான ஆகஸ்ட் எட்டாம் தேதி
ஆரஞ்சு மிட்டாய் படத்தை இயக்கிய பிஜூ விஸ்வநாத் அடுத்ததாக புதுமுகங்களை வைத்து சென்னை பழனி மார்ஸ் என்ற படமொன்றை உருவாக்கி இருக்கிறார். பிஜூ இந்தப் படத்திற்கு திரைக்கதை எழுதி, இயக்கியிருப்பதுடன், ஒளிப்பதிவு, படத்தொகுப்பையும் கவனித்திருக்கிறார். நடிகர் விஜய் சேதுபதி இந்த படத்திற்கு வசனம் எழுதியிருக்கிறார். ஆரஞ்சு மிட்டாய் புரொடக்ஷன்ஸ் & விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ்
தேவி படத்தில் தமன்னாவுக்குப் பேய் பிடிக்கும் அதை அவருக்கே தெரியாமல் சரி செய்வார் பிரபுதேவா. தேவி ப்ளஸ்டூ படத்தில் பிரபுதேவாவை ஒன்றுக்கு இரண்டு பேய்கள் பிடிக்கின்றன. அவற்றை பிரபுதேவாவுக்குத் தெரியாமலே விரட்ட தமன்னா எடுக்கும் முயற்சிகள்தாம் படம். பிரபுதேவா அப்பாவித்தனமானவர் ஸ்டைலானவர் முரட்டுத்தனமானவர் ஆகிய மூன்று விதமாகத் தோன்றுகிறார். ஒன்றுகொன்று வித்தியாசம்
மே 17 அன்று வெளியான மான்ஸ்டர் படம் இரண்டு வாரங்களைக் கடந்தும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் ஊடகங்கள் மற்றும் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா மே 27 அன்று சென்னையில் நடந்தது. அவ்விழாவில் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் பேசும்போது… படத்தின் முதல் வரியை எழுதும்போது இந்தளவு வெற்றி கிடைக்கும் என்று நினைக்கவில்லை. குழந்தைகள் படமாக இருக்கும் என்றும் நினைக்கவில்லை.
நடிகர் விஜய் நடிக்கும் 63 ஆவது படத்தை அட்லீ இயக்குகிறார். இந்தப் படம் கால்பந்து ஆட்டத்தை மையமாகக் கொண்ட கதை என்று கூறப்படுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈ.வி.பி. பிலிம் சிட்டியில் பிரமாண்டமான அரங்கு அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஏராளமான ஊழியர்கள் இரவு பகலாக இந்தப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு
விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள கொலைகாரன் படம் இப்போது வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளது. இந்தப்படத்தை பிரதீப் என்பவர் தயாரித்திருக்கிறார். ஆனால் இதற்கு முன் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்து வெளியான அண்ணாதுரை, காளி, திமிருபுடிச்சவன் ஆகிய மூன்று படங்களையும் விஜய் ஆண்டனியே தயாரித்திருந்தார். அம்மூன்று படங்களுமே சரியாகப் போகாததால் நட்டம் ஏற்பட்டு அதனால் அவருக்குக் கடன்
நடிகரும் அரசியல்வாதியுமான ஜே.கே.ரித்தீஷ், ஏப்ரல் 13 அன்று திடீர் மரணமடைந்தார். அவர், இலங்கையில் உள்ள கண்டியில் 1973 மார்ச் 5 ஆம் தேதி பிறந்தவர் முகவை குமார் என்ற ஜே.கே.ரித்தீஷ். கானல் நீர், பெண் சிங்கம், நாயகன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான எல்.கே.ஜி படத்திலும் அவர் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜே.கே.ரித்தீஷுக்கு ஜோதீஸ்வரி என்ற






















