நடிகர் உருவம் பொறித்த அஞ்சல்தலை
கிஷோர்- கருணாகரன் உட்பட பலர் நடித்த கடிகார மனிதர்கள் படத்தில் நகைச்சுவை கலந்த குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றவர் பிரதீப் ஜோஸ்.கே.
சமூக சேவகரான இவர் கராத்தே வீரரும் ஆவார். இவை தவிர மாநில அளவிலான கூடைப்பந்து விளையாட்டு வீரரும் கூட.
இவர் தற்போது,இயக்குநர் ஷங்கரின் உதவியாளர் அரண் இயக்கத்தில் ஷாரிக் ஹாசன், அம்மு அபிராமி உள்ளிட்டோர் நடித்த ஜிகிரி தோஸ்த் படத்தில் கமாண்டராக ஒரு கனமான பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இ.பிரகாஷ் இயக்கத்தில் தயாராகும் புதிய படத்தில்,சதீஷ், யோகிபாபு,பிக்பாஸ் டேனியல், தேவ் சிவகுமார் ஆகியோருடன் கதாநாயகர்களில் ஒருவராக நடித்துள்ளார்.
இப்படங்கள் விரைவில் திரைக்கு வரத் தயாராகின்றன. இவற்றின் மூலம் பிரதீப் ஜோஷ்.கே தமிழ்த் திரையுலகினரின் பார்வையிலும் இரசிகர்களின் மனதிலும் ஒருங்கே இடம் பெறுவார் என்பதில் ஐயமில்லை. மேற்கூறிய படங்களின் தயாரிப்பாளரும் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.

pradeep jose.k
விளையாட்டு வீரர், நடிகர் என்பனவற்றோடு, ஏழை எளிய மக்களுக்கு உதவிகளும் செய்து வருகிறார் பிரதீப் ஜோஷ்.கே. அவர் வசிக்கும் கோவை கவுண்டம்பாளையம் மற்றும் அதன் சுற்றியுள்ள மக்களின் நன்மதிப்பையும் அன்பையும் பெற்றிருக்கிறார். இவரின் சமூக சேவையைக் கருத்தில் கொண்டு இவர் உருவம் பொறித்த தபால் தலையும் வெளியிடப்பட்டு இருக்கிறது. இது அவருக்குப் பல தரப்பினரின் பாராட்டுகளையும் போற்றுதல்களையும் பெற்றுத்தருகிறது.











