உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து என்றார் திருவள்ளுவர். இந்தக் குறளுக்கு,பல்வேறு தொழில் புரிகின்ற மக்களின் பசி போக்கிடும் தொழிலாக உழவுத் தொழில் இருப்பதால் அதுவே உலகத்தாரைத் தாங்கி நிற்கும் அச்சாணி என்பது பொருள். அப்படி உலகத்தைத் தாங்கி நிற்கும் அச்சாணியாக இருக்கும்
தற்கால உலகில் ஒரு விவசாயியுடைய வாழ்வினை மையமாக வைத்து,அழுத்தமான திரைக்கதையில் அனைத்துதரப்பினரும் இரசிக்கும் வகையிலான கமர்ஷியல் படமாக மருதம் உருவாகியுள்ளது. இயக்குநர்கள் சரவண சுப்பையா,மோகன் ராஜா, பொம்மரிலு பாஸ்கரிடம் பணிபுரிந்தவரும்,அடையாறு திரைப்படக் கல்லூரியில் பயின்றவரும்,தற்பொது SRM கல்லூரியில் உதவிப்பேராசியராகப் பணியாற்றுபவருமான கஜேந்திரன் இப்படம் மூலம் இயக்குநராக
சாஜி சலீம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம்’லாந்தர்’.இப்படத்தில் விதார்த், ஸ்வேதா டோரத்தி, விபின், சஹானா, பசுபதி ராஜ், கஜராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஞான சௌந்தர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு எம்.எஸ்.பிரவீன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்புப் பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை கல்லை தேவா கவனித்திருக்கிறார். கிரைம்
சமுதாயத்தைப் பிரதியெடுத்தல் அல்லது பிரதிபலித்தல் தாம் கலைகள் என்பார்கள்.மருத்துவக் கனவோடு இருக்கும் இன்றைய இளைய சமுதாயத்தையும் அவர்தம் பெற்றோரையும் பிரதிபலித்திருக்கும் கலைப்படைப்பு தான் அஞ்சாமை. உலகிலேயே தலை சிறந்த மருத்துவர்களைக் கொண்ட இந்நாட்டில் மருத்துவப் படிப்புக்குத் தகுதித்தேர்வு அவசியம் என்கிற சட்டத்தையும் அதை நடைமுறைப்படுத்தும் இலட்சணங்களையும் நெற்றிப்பொட்டில்
பல்வேறு வெற்றி படங்களை தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம், முழுமையாக ஒரு படத்தினை வாங்கி வெளியிடுகிறது. அப்படம் ‘அஞ்சாமை’. இதனை திருச்சித்ரம் சார்பில் டாக்டர் திருநாவுக்கரசு தயாரித்துள்ளார். மோகன் ராஜா, லிங்குசாமி உள்ளிட்டோரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த எஸ்.பி.சுப்புராமன் இதனை இயக்கியுள்ளார். விதார்த், வாணி போஜன், ரகுமான், கிருத்திக் மோகன், பாலசந்திரன் ஐஏஎஸ்
சவரக்கத்தி இயக்குநர் ஆதித்யா இயக்கத்தில் விதார்த், பூர்ணா, அருண், மிஷ்கின் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் “டெவில்”. இப்படத்திற்கு முதன்முறையாக இயக்குநர் மிஷ்கின் இசையமைத்து இருக்கிறார்.சாகித்ய அகாடமி விருது வென்ற எழுத்தாளர் தேவிபாரதி எழுதிய “ஒளிக்குப் பிறகு இருளுக்கு அப்பால்” என்னும் நாவலைத் தழுவி உருவாகியிருக்கும் திரில்லர் வகைத் திரைப்படம் டெவில்.
அறிவியல் தொழில்நுட்பத் துணையுடன் கொலை கொள்ளை என இஷ்டத்துக்குச் செய்து திரியும் ஒரு கூட்டத்தை சாமானிய இளைஞனொருவன் ஆற்றலுடன் எதிர்கொள்வதுதான் ஆற்றல் திரைப்படம். புதியகண்டுபிடிப்புகளில் ஆர்வமுடையவராக இருக்கிறார் நாயகன் விதார்த். ஆள் இல்லாமல் இயங்கும் மகிழுந்தை உருவாக்குவது அவருடைய கனவு. அந்தக்கனவை நனவாக்க உறுதுணையாக இருக்கும் அப்பா திடீரென மரணமடைகிறார். அவர் எப்படி
உறுமீன்’ படத்தை இயக்கிய சக்திவேலுவும் விதார்த்தும் இணைந்துள்ள படம்தான் ‘பயணிகள் கவனிக்கவும்’. மலையாளத்தில் ‘விக்ருதி’ என்ற பெயரில் வெளியாகி வெற்றியடைந்த படம் இது. பள்ளி நூலகத்தில் புத்தகக் காப்பாளராக இருக்கிறார் விதார்த். செவித்திறன் , பேசும் திறன் இல்லாதவர். அவருடைய மனைவி லஷ்மி ப்ரியா. அவரும் கணவரைப் போல் மாற்றுத்திறனாளி. இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள். ஏழையாக
இயக்குநர் எஸ்.பி.சக்திவேல் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘பயணிகள் கவனிக்கவும்’. இந்தத் திரைப்படத்தில் நடிகர் விதார்த், கருணாகரன், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, மாசூம் சங்கர், சரித்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எஸ்.பாண்டி குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு ஷாம்நாத் நாக் இசை அமைத்திருக்கிறார். மலையாளத்தில்
ஒருவருக்குக் கனவில் தோன்றும் காட்சிகள் நிஜத்திலும் நடந்தால் எப்படி இருக்கும்? நல்லது நடந்தால் நல்லது, அல்லது நடந்தால்? இந்தக் கேள்விகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் படம் கார்பன். நாயகன் விதார்த்துக்கு இது இருபத்தைந்தாவது படமாம். சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடிய படமாக அமைந்திருக்கிறது. ஜாலியாகப் பேசும் காட்சியிலும் சீரியசாகவே முகத்தை வைத்திருக்கிறார்.




















