ஒரு படத்தில் நாயகனுக்கு விநோதமான ஒரு நோய் இருப்பதாகச் சொல்லிவிட்டாலே இஷ்டத்துக்குக் கதை விடும் வாய்ப்பு கிடைத்துவிடும். ஆனால் இந்தப்படத்தில் அப்படி ஒரு நோயை வைத்துக்கொண்டே வித்தியாசமான திரைக்கதை அமைத்து படத்தை விறுவிறுப்பாகக் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குநர் ஆஷிப் குரைசி. படத்தின் நாயகன்
நடிகர் உதயா தயாரித்து நாயகனாக நடித்திருக்கும் படம் உத்தரவு மகாராஜா. ஆசிப் எனும் புதியவர் இயக்கியிருக்கிறார். இந்தப்படத்தில் நடிகர் பிரபு முக்கியவேடத்தில் நடிக்கிறார். நாயகியாக பிரியங்கா நடிக்கிறார். மலையாளத்தில் வெளியான நிவின்பாலியின் காயங்குளம்கொச்சுண்ணி உட்பட சில படங்களில் நடித்திருக்கும் அவருக்கு தமிழில் முதல்படம். இப்படம் நவம்பர் 16 அன்று வெளியாகவிருக்கிறது.













