ஒரு பேய்பங்களா, இரண்டு மூன்று குழுக்கள்,ஆபத்தான ஒரு விளையாட்டு அதாவது வென்றால் பரிசு தோற்றால் மரணம் என்கிற விளையாட்டு ஆகியனவற்றை வைத்துக் கொண்டு எழுதப்பட்டிருக்கும் கதைதான் டிடி ரிட்டர்ன்ஸ். இதில் கதையை விட நகைச்சுவைதான் அதிகமிருக்கவேண்டும் என்று நினைத்திருக்கிறார் இயக்குநர் பிரேம் ஆனந்த்.
ஆர் கே என்டர்டெயின்மென்ட் இரமேஷ் குமார் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நாயகனாக நடிக்கும் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’. ‘இவன் வேற மாதிரி’, ‘வேலையில்லாப் பட்டதாரி’ புகழ் சுரபி கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் மாறன், சேது, மொட்டை ராஜேந்திரன், பெப்சி விஜயன், முனீஷ் காந்த், பிரதீப் ராவத், ரெடின் கிங்ஸ்லி, தீனா,
ராம்பாலா இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்து 2016 ஆம் ஆண்டு வெளியான தில்லுக்கு துட்டு படம் வெற்றி பெற்றது. அதனால் அப்படத்தின் இரண்டாம்பாகமான தில்லுக்கு துட்டு 2, 2019 ஆம் ஆண்டு வெளியானது. இதையும் ராம்பாலாவே இயக்கியிருந்தார். இந்நிலையில் இப்படத்தின் மூன்றாம் பாகம் தொடங்கப்பட்டது. இம்முறை ராம்பாலா இயக்கவில்லை. அவரிடம் பணியாற்றிய பிரேமானந்த் என்பவர் இயக்கியிருக்கிறார்.














