மார்ச் 1,2018 முதல் புதிய திரைப்படங்களைத் திரையிடுவதில்லை என்று முடிவெடுத்த தயாரிப்பாளர்கள் சங்கம், மார்ச் 16ம் தேதி முதல் எந்தப் படப்பிடிப்பும் நடத்தக் கூடாது என்றும் உத்தரவிட்டது. வெளிநாடுகளில் நடக்கும் படப்பிடிப்புகளையும் மார்ச் 23 ஆம் தேதியோடு முடித்துக்கொள்ளவேண்டும் என்றும்
துப்பாக்கி,கத்தி ஆகிய படங்களைத் தொடர்ந்து, விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் மூன்றாவது முறையாக ஒரு படம் உருவாகி வருகிறது. இன்னும் பெயர் வைக்காத இந்தப் படம் தற்போது ‘தளபதி 62’ என்று அழைக்கப்பட்டு வருகிறது.இந்தப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கிழக்குக் கடற்கரைச் சாலை மற்றும் கொல்கத்தாவைத் தொடர்ந்து தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.













