மக்களை ஏமாற்றிப் பணம் சம்பாதிக்கும் நட்டியிடம் பல கோடி மதிப்புள்ள ஒரு வைரத்தைத் திருடும் வேலை ஒப்படைக்கப்படுகிறது.வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பது போல் நட்டியிடமிருந்தும் அந்த வைரம் களவு போகிறது.கடைசியில் என்னவாகிறது? என்பதைச் சிரிக்கச் சிரிக்கச் சொல்ல விழைந்திருக்கும் படம் கம்பி
உயர்நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த நாயகன் ஓர் இசைக்கலைஞராகவும் இருக்கிறார். எந்நேரமும் மது, மாது என்று இருக்கிறார். அவர் பற்றி நன்றாகத் தெரிந்தும் காதலிக்கிறார் ஒரு பெண். அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதுதான் டூடி படம். இந்தப்படத்தின் கதையை எழுதியிருப்பதோடு படத்தொகுப்பாளர் சாம்.ஆர்டி எக்ஸ் உடன் இணைந்து திரைக்கதை வசனமும் எழுதியிருக்கிறார் கார்த்திக் மதுசூதன். இவற்றோடு
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பிராங்க் ஷோ நடத்தும் குழுவில் அமலாபால் இருக்கிறார். அந்நிகழ்ச்சியில் அவர்கள் செய்யும் அடாவடிகள் மற்றும் அதன் விளைவுகள்தாம் படம். தமிழகத்தின் தென்கோடியில் நடந்த தோள்சீலைப் போராட்டத்தின் ஒரு பகுதியாக மார்பை மறைக்கும் உரிமைக்காக மார்புகளை அறுத்தெறிந்த பெண்ணின் அறிமுகத்தோடு படம் தொடங்குகிறது. அப்படிப் போராடிப் பெற்ற உரிமை இது. அதை அலட்சியம்














