திரைப்படங்கள் வெளீயீட்டில் க்யூப் மற்றும் யுஎஃப்ஓ போன்ற நிறுவனங்களுக்குச் செலுத்தப்படும் கட்டணம் தொடர்பான விவாதம் நடந்து வருகிறது. இதுவரை அத்தொகையைக் கட்டி வந்த தயாரிப்பாளர்கள், இனிமேல் நாங்கள் கட்டமாட்டோம் அது திரையரங்குக்காரர்கள் பொறுப்பு என்கின்றனர். இதை திரையரங்கினர் ஏற்கவில்லை.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 51 தயாரிப்பாளர்கள் கையெழுத்திட்டு, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்துக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார் இயக்குநர் பாரதிராஜா. அந்தக் கடிதத்துக்குப் பதிலை எதிர்பார்ப்பதாகவும், அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள விசயங்களில் உடன்படிக்கை ஏற்படாவிட்டால் புதிய படங்கள் வெளியீடு இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார் பாரதிராஜா. திரையரங்க உரிமையாளர்கள்
இந்தியாவிலேயே முதன்முறையாக அகண்ட திரைகொண்ட பார்வையாளர்களை திரையோடு ஒன்றச் செய்யும் புதிய அனுபவத்தை தரவல்ல எபிக் என்ற திரையரங்கை அறிமுகப்படுத்துகிறது க்யூப் சினிமா நிறுவனம். இந்தியாவின் முதலாவது எபிக் திரை, தெற்காசியாவின் மிகப்பெரிய எபிக் திரை என்ற சிறப்பம்சத்தோடு ஆந்திரப்பிரதேச மாநிலம், சூலூர்பேட்டையில் “வி எபிக்” என்ற திரையரங்கு உருவாக்கப்பட்டுள்ளது. சாஹோ
மூவிபஃப் மற்றும் 2டி எண்டர்டெயின்மெண்ட் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து இரண்டாம் ஆண்டிற்கான ஃபர்ஸ்ட் கிளாப் சீசன் 2 என்ற குறும் பட போட்டி நடத்தின. அப்போட்டியில், தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து குறும்படங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன. இதற்கான விழா சென்னை சத்யம் திரையரங்க வளாகத்தில் நடைபெற்றது. தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன், கியூப் சினிமா நிறுவன தலைமை
டிஜிட்டல் நிறுவனங்கள் அதிகக் கட்டணம் வசூலிப்பதை எதிர்த்து, மார்ச் மாதம் 1,2018 ஆம் தேதி முதல் புதுப்படங்களை வெளியிடாமல் போராட்டத்தில் ஈடுபட்டது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம். மேலும், மார்ச் 16 ஆம் தேதி முதல் தமிழகத்தில் நடைபெற்று வந்த படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதுடன்,படப்பிடிப்புக்குப் பிறகான பணிகளும் நிறுத்தப்பட்டன. முதலில் டிஜிட்டல் நிறுவனங்களுக்கு
தமிழகம் முழுவதும் மார்ச் 1,2018 ஆம் தேதி புதிய படங்கள் திரையிடுவது நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது. படப்பிடிப்புகளும் கடந்த 16-ம் தேதி நிறுத்தப்பட்டது. சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன. தயாரிப்பாளர்கள் சங்கம் எடுத்த இந்த முடிவை விமர்சித்து நடிகர் ரஜினிகாந்த் அண்மையில் பேட்டி கொடுத்தார். அதனால், தயாரிப்பாளர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ரஜினியைச்
திரையரங்குகளில் டிஜிட்டல் ஒளிபரப்புக்கு அதிக கட்டணம் வசூலிப்பதற்கு கண்டனம் தெரிவித்து மார்ச் 1-ம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்ய தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளது. இதனால் தமிழ்த் திரைப்படங்களின் படப்பிடிப்பு, வெளியீடு இருக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் பிப்ரவரி 6,2018 அன்று வெளியிட்டுள்ள


















