2010 ஆம் ஆண்டு வெளியான துரோகி படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகுக்கு இயக்குநராக அறிமுகமானவர் சுதாகொங்கரா. அப்படம் ஓடாததால் அடுத்த படம் எடுக்கப் பெரும் இடைவெளி. 2016 ஆம் ஆண்டு அவருடைய அடுத்த படமான இறுதிச்சுற்று வெளியானது. பெரும் வெற்றியைப் பெற்றது. அடுத்து அந்தப்படத்தையே இந்தியில் எடுத்தார்.
2013 ஆம் ஆண்டு வெளியான ராஜா ராணி படம் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் அட்லி. அதற்கடுத்து விஜய் நடித்த தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து இப்போது விஜய் நடித்திருக்கும் பிகில் படத்தை இயக்கியுள்ளார்.பிகில் நாளை வெளியாகவிருக்கிறது. இதுவரை நான்கு படங்களை மட்டுமே இயக்கியுள்ள அட்லி, சுமார் இருபது கோடி மதிப்பில் ஒரு வீடு வாங்கியிருக்கிறாராம்.அதுவும் ரஜினி வீடு இருக்கும்













