ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான சர்கார் படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் புதிய படத்தை அட்லீ இயக்குகிறார். ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, முத்துராஜ் கலைப் பணிகளை மேற்கொள்கிறார். விஜய் ஜோடியாக
2016 ஆம் ஆண்டு வெளியான ‘துருவங்கள் பதினாறு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘நரகாசூரன்’. இப்படத்தில் அரவிந்த்சாமி, மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாரன், ‘மாநகரம்’ சந்தீப் கிஷன், ஸ்ரேயா, ‘மீசைய முறுக்கு’ ஆத்மிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பல்வேறு சர்ச்சைகளுக்குப் பின் இப்படம் வெளியீட்டுக்குத் தயாராகியிருக்கிறது.
நரகாசூரன் பட வெளியீடு தொடர்பாக இயக்குநர் கார்த்திக் நரேனுக்கும், அந்தப் படத்தைத் தயாரித்திருக்கும் இயக்குநர் கவுதம் மேனனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால், தமிழ்த் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டது.அது சற்று ஓய்ந்திருந்தது. இந்நிலையில், ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் அவரது டுவிட்டர் பக்கத்தில் கவுதம்மேனன் மீது குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக
கவுதம்மேனன் தயாரிப்பில் துருவங்கள் 16 புகழ் கார்த்திக்நரேன் இயக்கும ‘நரகாசூரன்’ படம் சம்பந்தமாக, கார்த்திக்நரேன் ஒரு ட்வீட் போட பதிலுக்கு கௌதம் மேனன் பேச விவகாரம் பரபரப்பானது. இந்நிலையில் இது பற்றி கௌதம் மேனன் ஒரு நீண்ட கடிதம் ஒன்றை டிவீட் செய்திருக்கிறார். அதில் கூறியிருப்பதாவது, “நரகாசூரன் படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன் போட்ட டிவீட் என்னை வருத்தப்பட வைத்துவிட்டது.















