பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்களுக்குப் பிறகு ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அலியா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். டிவிவி நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.
2015 ஆம் ஆண்டு ஜூலை 10 ஆம் தேதி பாகுபலி 1 படம் வெளியானது.2017 ஏப்ரல் 28 அன்று பாகுபலி 2 படம் வெளியானது. இவ்விரு படங்களின் பெரிய வெற்றியால் தமிழகத்திலும் புகழ்பெற்றிருப்பவர் இயக்குநர் ராஜமௌலி. அவர் இயக்கத்தில்,தெலுங்கின் முன்னணி நடிகர்கள் ராம்சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர் ஆகிய இருவரையும் வைத்து ‘ஆர்.ஆர்.ஆர்’ என்கிற படத்தை எடுத்துக்கொண்டிருக்கிறார் ராஜமெளலி. சுமார் 400 கோடி













