அஜய்ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா, அதர்வா, ராஷிகண்ணா உட்பட பலர் நடித்த இமைக்கா நொடிகள் படம் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வெளியானது. படத்துக்கு நல்ல வரவேற்பு மட்டுமல்ல நல்ல வசூலும் கிடைத்திருக்கிறது என்று சொல்கிறார்கள். இரண்டு வாரங்கள் கடந்த நிலையிலும் இன்னும் படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் பெரிய
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா அதர்வா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் இமைக்கா நொடிகள். இந்தப்படத்தின் இசை வெளியீட்டுவிழா ஜூன் 27 அன்று நடைபெற்றது. விழாவுக்கு நயன்தாராவும் வரவில்லை, அதர்வாவும் வரவில்லை. நயன்தாராவைப் பொறுத்தவரை, படத்தில் ஒப்பந்தம் ஆகும்போதே படத்தின் நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டேன் என்று சொல்லிவிடுகிறாராம். அதனால் அவர் வரவில்லை. அதர்வா ஏன் வரவில்லை?
அதர்வா தயாரித்து நடித்திருக்கும் செம போத ஆகாத படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. அதற்கடுத்த அவர் நடித்திருக்கும் இமைக்கா நொடிகள் பட வேலைகளும் முடிவடைந்துவிட்டனவாம். கடந்த ஆண்டு தொடக்கத்தில் அதர்வா நடிப்பில் தொடங்கப்பட்ட படம் ஒத்தைக்கு ஒத்தை. இந்தப்படம் பாதியளவு படப்பிடிப்பு நடந்ததோடு நிற்கிறதாம். அதர்வா படங்களுக்கு வியாபாரம் இல்லை என்பது மட்டுமின்றி எதிர்பார்ப்பும் இல்லை













