நாயகன் தினேஷுக்கு நாயகி தீப்தியைப் பார்த்ததும் காதல். ஆனால் நாயகிக்கோ காதல், திருமணம் ஆகியனவற்றில் நம்பிக்கை இல்லை. அதனால் வேலைக்காக இலண்டன் சென்றுவிடுகிறார். நடுத்தர வர்க்க தினேஷும் தீப்தியைத் தேடி நண்பர்களுடன் இலண்டன் செல்கிறார். அங்கும் தினேஷை நிராகரிக்கிறார் தீப்தி.











