மோடி அரசு அறிமுகப்படுத்தியிருக்கும், ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவு 2021 க்கு திரையுலகினர் மற்றும் முற்போக்கு சக்திகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. இயக்குநர் அமீர் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்…. வாழ்க ஜனநாயகம்.! ஒழிக சர்வாதிகாரம்!! ஜெய் தமிழ்நாடு!!! இந்தியா. பல்வேறு
2019 ஆம் ஆண்டும் பிப்ரவரி 12 ஆம் தேதி மாநிலங்களவையில் ஒளிப்பதிவு திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது மீண்டும் 2021-இல் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இந்தத் திருத்தச் சட்டப்படி ஒரு முறை தணிக்கைக்கு உள்ளான திரைப்படங்கள் மீண்டும் தணிக்கை செய்ய கோர முடியும். மேலும் திரைப்பட திருட்டுகளுக்கு கடுமையான சிறை தண்டனை, அபராதம் ஆகியவை விதிக்கப்பட உள்ளன.
ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவு 2021 என்கிற பெயரில் ஒரு சட்டத்தை இயற்ற மோடி அரசு முன்வந்திருக்கிறது. இச்சட்டம் நடைமுறைக்கு வந்தால், ஒரு திரைப்படம் வெளியான பின்பு அதுபற்றி யாராவது சிலர் புகார் கொடுத்தால் அதனடிப்படையில் அப்படத்தைத் தடை செய்யவும் அப்படம் எடுத்தவர்களைக் கைது செய்யவும் முடியும். சனநாயகத்தின் குரல்வளையை அப்பட்டமாக நெறிக்கும் இச்சட்டம் குறித்து மக்கள் கருத்தைக்














