சினிமா செய்திகள்

நள்ளிரவில் வெளியான சூர்யா பட செய்தி – ரசிகர்கள் மகிழ்ச்சி

இயக்குநர் செல்வராகவன் சூர்யா கூட்டணியில் உருவாகும் என்.ஜி.கே படத்தை தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படம் முதலில் 2018-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் சில காரணங்களுக்காக தள்ளிவைக்கப்பட்டது.

இப்படத்தின் டீசர் பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியானது. ஆனாலும் படம் எப்போது வெளியாகும் என்று சொல்லப்படவில்லை.

இது அரசியல் சார்ந்த படமென்பதால் 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்தல் முடிந்தபின் மே மாதம் படம் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் என் ஜி கே படத்தின் குரல்பதிவு தொடங்கியிருக்கிறது. சூர்யா குரல்பதிவு செய்யும் புகைப்படத்தை வெளியிட்டு இந்தத் தகவலைச் சொல்லியுள்ளார் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு. மார்ச் 22 நள்ளிரவில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

படம் எப்போது வெளியாகும் என்பதை விரைவில் அறிவிப்பதாகவும் சொல்லியிருக்கிறார். இதனால் சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.

Related Posts