குரலற்றவர்களின் குரல் தான் மாஸ்க் படம் – வெற்றிமாறன் பேச்சு
அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கத்தில்,இயக்குநர் வெற்றிமாறன் மேற்பார்வையில், கவின், ஆண்ட்ரியா ஜெரேமியா, ருஹானி சர்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் மாஸ்க்.இப்படத்திற்கு ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கிறார்.ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.ஆர்.ராமர் படத்தொகுப்புப் பணிகளை கவனிக்க, ஜாக்கி,எம்.விஜய் ஐயப்பன் கலை இயக்கம் செய்துள்ளனர்.சண்டைக் காட்சிகளை பீட்டர் ஹெய்ன்,விக்கி ஆகியோர் வடிவமைத்துள்ளனர்.
தி ஷோ மஸ்ட் கோ ஆன் மற்றும் ப்ளாக் மெட்ராஸ் ஃபிலிம்ஸ் (The Show Must Go On & Black Madras Films) ஆகிய நிறுவனங்கள் சார்பில், ஆண்ட்ரியா ஜெரேமியா,எஸ்.பி.சொக்கலிங்கம் ஆகியோர் தயாரிப்பில் உருவான இப்படம், 2025 நவம்பர் 21 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.இந்நிலையில் இப்படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா அக்டோபர் 9 அன்று நடைபெற்றது.
இவ்விழாவினில்..,
நடிகை ருஹானி சர்மா பேசியதாவது..,
எல்லோருக்கும் வணக்கம், இது எனக்கு மிகவும் ஸ்பெஷல் டே,இந்த நாளுக்காக இரண்டு வருடம் காத்திருந்தேன். வெற்றிமாறன் சார் முன்னால் பேசக் காத்திருந்தேன்.அவர் தந்த ஆதரவுக்கு நன்றி. இன்னும் சில நாட்களில் படம் வரப்போகிறது. மகிழ்ச்சியாக இருக்கிறது.விஜய் சேதுபதி சாரின் தீவிர இரசிகை நான். அவர் வாழ்த்த வந்திருப்பது மகிழ்ச்சி. எங்களுக்கு ஆதரவளிக்கும் மீடியா நண்பர்களுக்கு நன்றி.இயக்குநர் விகர்னனுக்கு எனக்கு நல்ல கதாபாத்திரம் தந்ததற்கு நன்றி.என் கோ ஸ்டார் கவின். அவர் எனக்கு நிறைய ஆதரவாக இருந்தார்.கவினுடன் நடித்தது மிக மகிழ்ச்சியான அனுபவம்.ஆண்ட்ரியா மிகச்சிறந்த நடிகை.இப்படத்தைத் தயாரித்துள்ளார்.அவர் இன்னும் நல்ல படங்கள் தயாரிக்க வாழ்த்துகள்.ஜீவி பிரகாஷ் எனக்கு டான்ஸ் ஆட மிகச்சிறந்த பாடல்கள் தந்ததற்கு நன்றி.என்னை மிக அழகாகக் காட்டிய ஒளிப்பதிவாளருக்கு நன்றி. படத்தில் வேலை செய்த அனைவருக்கும் நன்றி. நவம்பர் 21 அனைவரையும் திரையரங்கில் சந்திக்கிறோம் நன்றி என்றார்.
நடிகர் பவன் பேசியதாவது…,
இந்தப்படத்தில் நான் கஷ்டப்படவே இல்லை.கஷ்டப்பட்டதெல்லாம் தயாரிப்பாளர்,இயக்குநர் தான்.எனக்கு அரசியல்வாதி கேரக்டர் ஏசியில் தான் முழுக்க நடித்தேன். கிளைமாக்ஸ் மட்டும் என்னால் மறக்கமுடியாது. ரெடின் கிங்ஸ்லியின் ஒரு காட்சி பார்த்தேன் மிக அருமையாக இருந்தது. கவின் சூப்பராக நடித்துள்ளார். வெற்றி சார் கடையைச் சாத்துகிறேன் என்றார். ஆனால் இந்தப்படத்திற்குப் பிறகு நிறையக் கடைகள் திறப்பார்.ஆண்ட்ரியா மேடம் தயாரிப்பாளராக மாறிவிட்டார் வாழ்த்துகள்.படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது, அனைவருக்கும் பிடிக்கும் நன்றி என்றார்.
இயக்குநர் சுப்பிரமணியம் சிவா பேசியதாவது..,
இயக்குநர் வெற்றிமாறனை வழிகாட்டியாக எடுத்துக்கொண்டு விகர்ணன் இப்படத்தை இயக்கியுள்ளார். எனக்கு விகர்ணன் என்ற பெயர் கேட்டவுடன் அவரைப் பார்க்கவேண்டும் என்ற ஆவல் தோன்றியது. மகாபாரத கௌரவர்களின் பெயர்,அதை வைத்துக்கொண்டதற்கு வாழ்த்துகள்.எம் ஆர் ராதா மிகப்பெரிய ஆளுமை,அவரை மீண்டும் தமிழ்சினிமாவில் கொண்டு வந்ததற்கு நன்றி.ஆண்ட்ரியா மேடம் ஒரு படத்தை இயக்கிவிட்டால், நடிகை பானுமதி சாதனையைச் சமன் செய்துவிடுவார். பாடுகிறார், நடிக்கிறார் இப்போது தயாரித்துள்ளார் அவர் வெல்ல வாழ்த்துகள். சொக்கலிங்கம் மிக நல்லமனிதர், மிகப்பெரிய தயாரிப்பாளராக வாழ்த்துகள். ஒரு கவிதைக்கு ஆண்பால் இருந்தால் அதுதான் கவின். டாடாவுக்கு பிறகு மிகப்பெரிய வெற்றிப்படமாக மாஸ்க் அமைய வாழ்த்துகள். ஜீவி பிரகாஷ் எங்களுடனே இருப்பவர். குழந்தைத் தொழிலாளராக சினிமாவுக்குள் வந்தவர். சின்னவயதில் சிக்குபுக்கு சிக்குபுக்கு பாடல் பாடியவர்,இப்போது அவர் இரண்டு தேசிய விருதுகள் வாங்கிவிட்டார்.ஆர் டி ராஜசேகர் என் குருநாதர்.அவர் மாதிரி கேமரா யாராலும் பண்ண முடியாது.கேமரா மாஸ்டர்களில் ஒருத்தர் அவர்.மனதால் மிக உற்சாகமான மனிதர்.அனைவருக்கும் வாழ்த்துகள்.மாஸ்க் மிகப்பெரிய வெற்றி பெறட்டும் நன்றி என்றார்.
ஒளிப்பதிவாளர் ஆர் டி ராஜசேகர் பேசியதாவது..,
இந்தப்படம் ஆரம்பித்ததிலிருந்து,நாம் செய்யும் உழைப்பிற்கு எப்படியாவது வெற்றி பெறவேண்டும் என நினைத்துக்கொண்டே இருந்தேன்.டிரெய்லர் வந்தபிறகு எல்லோரும் பாராட்டினார்கள்.படத்தின் வெற்றி இயக்குநரின் கையில் உள்ளது.கவின் மிகச்சிறப்பாக நடித்துள்ளார்.ஆண்ட்ரியா இதுவரை செய்யாத ரோல் செய்துள்ளார்.ருஹானி சர்மா மிக அழகாக இருக்கிறார்.வெற்றி சார் ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு அதிகம் வரமாட்டார்.ஆனால் அவர் வழிகாட்டுதல் இருந்தது. ஜீவி சார் இரசிகன் நான்,அவர் இசை அருமையாக வந்துள்ளது.சொக்கு சாருடன் நிறையப் பழகியுள்ளேன் அவர் தயாரிப்பாளராக வெற்றி பெறவேண்டும். அனைவருக்கும் நன்றி என்றார்.
கலை இயக்குநர் விஜய் ஐயப்பன் பேசியதாவது..,
எனக்கு வாய்ப்பு தந்த சொக்கலிங்கம் சாருக்கு நன்றி.எனக்கு மிக உறுதுணையாக இருந்த இயக்குநருக்கு நன்றி.படம் நன்றாக வந்துள்ளது.அனைவருக்கும் நன்றி என்றார்.
படத்தொகுப்பாளர் ஆர்.இராமர் பேசியதாவது..,
மிக்க மகிழ்ச்சி. வெற்றி சார் என்னை நிறைய ஏமாற்றிவிட்டார். அவர் டிரையாக செய்து செய்து, கலராக எதாவது தாருங்கள் என்று ஏங்கிய நேரத்தில் மாஸ்க் தந்து ஆச்சரியம் தந்தார். ஜீவி சார் இசையைக் கேட்டு நிறைய முறை மிரண்டிருக்கிறேன். அசுரன் பிஜிஎம் இப்போது பார்த்தாலும் ஆச்சரியமாக இருக்கும். மாஸ்க் படத்தையும் தாங்கியுள்ளார். அவர் இசை ஆட வைக்கிறது. சொக்கலிங்கம் ஐயாவிற்கு நன்றி. கவின் சார் உங்களுக்காக இந்தப்படம் பேசும்.ஒரு ஹீரோவை ஃப்ரேமில் பார்க்கும்போது யாரவது ரிசம்பிள் எடுத்து செய்வார்கள். ஆனால், கவின் இப்படியும் செய்யமுடியுமா? என ஆச்சரியப்படுத்திவிட்டார்.ஆண்ட்ரியா மேடம் ஒரு அவதாரம் எடுத்துள்ளார். இது அவருக்குத் திருப்புமுனையாக இருக்கும்.தயாரிப்பாளராக ஜெயிக்க வாழ்த்துகள். ருஹானி சர்மா பார்க்கும்போது டாப்ஸி ஞாபகம் வந்தது,திரையில் அந்த ஃபீல் தந்துள்ளார்.அவர் மிகப்பெரிய இடத்திற்கு வர வாழ்த்துகள். பவன் சார் நடிப்பைப் படம் பார்க்கும்போது என்ஜாய் செய்வீர்கள்.படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றிகள்.சொக்கு சார் அடுத்தடுத்து படம் செய்ய வாழ்த்துகள். விகர்னன் கதை சொன்னபோதே ஆச்சரியமாக இருந்தது. படமாக இன்னும் சிறப்பாக வந்துள்ளது. அவ்வளவு உழைப்பை அனைவரும் தந்துள்ளார்கள்.இப்படத்திற்கு முதுகெலும்பாக இருக்கும் வெற்றிமாறன் சாருக்கு நன்றி.நவம்பர் 21 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது.மிகப்பெரிய வெற்றி பெறவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன் நன்றி என்றார்.
நடிகர் ரெடின் கிங்ஸ்லி பேசியதாவது..,
இப்பட வாய்ப்பு தந்த தயாரிப்பாளர் சொக்கலிங்கம், இயக்குநர் விகர்ணன், ஆண்ட்ரியா மேடம் மற்றும் கவின் அனைவருக்கும் நன்றி. விகர்னன் ஒவ்வொரு சீனையும் செதுக்கிச் செதுக்கி எடுத்துள்ளார்.ஆர் டி ராஜசேகர் சாருடன் மூன்றாவது படம் செய்துள்ளேன் நன்றி சார்.பவனும் நானும் டான்ஸர்ஸ்,பலவருட பழக்கம்.அவரை வில்லனாகவே மாற்றிவிட்டார்கள். அவர் ஒரு நல்ல டான்ஸர்.இந்தப்படத்தில் பார்ப்பீர்கள்.ஜீவி ஏற்கனவே இரண்டு தேசியவிருது வாங்கிவிட்டார்,இனிமேல் சாதிக்க ஏதுமில்லை.விஜய்சேதுபதியுடன் ஒரு படம் நடித்துள்ளேன் மிகவும் இயல்பானவர்.ஆண்ட்ரியா மேடம் அவருக்கு இந்தப்படம் மூலம் பணம் கொட்டட்டும்.வெற்றிமாறன் சார் தமிழ்சினிமாவின் பெருமை.அவர் மேற்பார்வையில் நானும் நடிப்பது பெருமை.கவின் கூட இருப்பவர்களை அணைத்துக் கொள்வார்,அவருக்கு இந்தப்படம் நல்ல படமாக அமையும் வாழ்த்துகள் என்றார்.
இயக்குநர் நெல்சன் பேசியதாவது..,
நான் அதிகம் விழாக்களுக்குச் செல்வதில்லை,இந்த விழாவிற்கு வரவேண்டுமென 6 மாதம் முன்பே வெற்றிமாறன் சார் சொல்லிவிட்டார். இந்தக்கதை கேட்டபோது, இதற்கும் வெற்றிமாறனுக்கும் சம்பந்தமே இல்லையே என நினைத்தேன். படுபயங்கர குதர்க்கமான கதையாக இருந்தது. இயக்குநரைப் பார்த்தே ஆகவேண்டும் என நினைத்தேன், விகர்ணன் எல்லா க்ரைமுக்கும் செட்டாவது போல்தான் இருந்தார்.அவர் சொன்னதையெல்லாம் எடுக்கவே முடியாது.இந்தக்கதை ஐடியா எல்லாம் மிகவும் புதுசாக இருந்தது.விகர்ணன் கதை,கவின் ஹேட்டர் செய்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது.ஆனால் வெற்றிமாறன் சார் அதைக் கொஞ்சம் மாற்றியிருக்கிறார்.இது இரசிகர்களுக்கு புது எக்ஸ்பீரியன்ஸாக இருக்கும். ஜீவிசார் மியூசிக் சூப்பாராக வந்துள்ளது.கவின் எதற்கும் தயாராக இருக்கிறான்.அவன் இன்று மேலே,கீழே போய் வந்தாலும்,நல்லகதைகளைத் தேர்ந்தெடுக்கிறான். சினிமாவில் நீண்ட காலம் நிலைத்து இருப்பான்.ஆண்ட்ரியா மேடமுக்கு சவாலான கேரக்டர் வாழ்த்துகள்.ரெடினை கண்ட்ரோலாக நடிக்க வைத்திருந்தார்கள் வாழ்த்துகள்.ஒரு குழுவாக அனைவரும் மிகப்பெரிய வெற்றியைப் பெற வாழ்த்துகள் என்றார்.
ஜீவி பிரகாஷ் குமார் பேசியதாவது…..
மாஸ்க் டீமில் எல்லோருமே எனக்கு நெருங்கிய நண்பர்கள்,நான் கடைசியாகத்தான் வந்தேன்.ஆண்ட்ரியா மேடமுக்கு வாழ்த்துகள். அந்நியன் படத்தில் அவர் முதன்முதலில் பாடும்போது நான் அவர் அருகிலிருந்தேன்,அப்போதிலிருந்து அவரைத் தெரியும்.அவர் தயாரிப்பாளராக மாறியிருக்கிறார்.அவருக்கும் சொக்கலிங்கம் சாருக்கும் வாழ்த்துகள்.வெற்றி சார் பவன் சொன்ன மாதிரி திரும்ப கடையை திறக்க வாழ்த்துகள்.விகர்ணன் வெற்றிமாறன் சார் சாயலே இல்லாமல் கதை சொன்னார்.ஆச்சரியமாக இருந்தது. இந்தப்படம் பரபரவென இருக்கும்.ஆர் டி ராஜசேகர் நாங்கள் சினிமாவுக்கு வரும்போதே பெரிய கேமராமேன்,அவருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. கவின் சூப்பராக நடித்துள்ளார்.ருஹானி பெரிய ஹீரோயினாக வாழ்த்துகள்.மாஸ்க் படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகள் என்றார்.
நடிகை, தயாரிப்பாளர் ஆண்ட்ரியா ஜெரேமியா பேசியதாவது..,
நான் ஒரு விழாவில் பங்குகொண்டு நீண்ட வருடம் ஆகிவிட்டது.எனக்கு ஒருபடம் விரைவில் வருகிறது மகிழ்ச்சி.கவினுக்கு இது மிகவும் முக்கியமான படம்.ருஹானிக்கு முதல்படம்.சொக்கு சாருக்கு தயாரிப்பாளராக முக்கியமான படம்.எங்கள் அனைவருக்கும் மெண்டார் வெற்றிமாறன் சார், அவர்தான் எங்களின் பப்பெட் மாஸ்டர்.ஆர் டி ராஜசேகர் அவர் கேமரா செய்தால் எல்லோரும் அழகாக இருப்பார்கள்.என்னோடு உழைத்த அனைத்து நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்களுக்கு நன்றிகள். படம் நவம்பர் 21 ஆம் தேதி திரைக்கு வருகிறது. அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி என்றார்.
இயக்குநர் விகர்ணன் பேசியதாவது..,
என்னுடைய உதவி இயக்குநர்களுக்கும் படத்தில் உதவிய வெற்றிமாறன் சார் உதவியாளர்களுக்கும் நன்றிகள். நான் இங்கு நிற்க காரணமான ஆண்ட்ரியா மேடமுக்கு நன்றி. அவர்தான் வெற்றிமாறன் சாரிடம் என் கதையைப் படிக்கத்தந்தார். சொக்கலிங்கம் அண்ணா நிறையப்பேரை வளர்த்துவிட்டுள்ளார், என்னையும் வளர்த்துவிட்டதற்கு நன்றி. ஆர் டி ராஜசேகர் அவர் ஒரு ட்ரீட்.ஷூட்டிங்கில் அவர் இருந்தாலே ஜாலியாக இருக்கும். நெல்சன் அண்ணாவே ஒரு ஜானர்தான் அவர் இந்தப்படத்தில் இருக்கிறார் ஆனால் யாருக்கும் தெரியமாட்டார்.அவருக்கு நான் நிறையக் கடமைப்பட்டுள்ளேன்.விஜய்சேதுபதி அண்ணா.அசோக் செல்வன் என் நண்பன்,உங்களைப் பற்றி நிறையப் பேசுவான். நீங்கள் நல்ல இதயம் கொண்ட மனிதர்.வாழ்த்த வந்ததற்கு நன்றி.ருஹானி சர்மா திறமையானவர் சிறப்பாக நடித்துள்ளார்.நண்பர் ஜீவி,நீங்கள் நான் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக உணரவைத்தீர்கள். நீங்கள் தந்த இசைக்கு நன்றி.ரெடின் ஒரு அழகான ரோல் செய்துள்ளார்.ராமரை எடிட்டிங்கிற்கு கூட்டி வந்ததற்கு வெற்றிமாறன் சாருக்கு நன்றி.ஸ்டைலீஷாக எடிட் செய்துள்ளார். ஐயப்பன் அண்ணாவுடன் நிறையப்படம் சேர்ந்து செய்வேன் என் கூடவே இருந்தார் அவருக்கு நன்றி.கவின் ப்ரோ படத்தில் அவர் பெயர் வேலு.இவனுடன் சேர்ந்தால் உருப்பட மாட்டாய் என்பார்களே,அந்தமாதிரி ஒரு ரோல். அவருக்குள் ஒரு கெட்டவனும் இருப்பான், நல்லவனும் ஓரத்தில் இருப்பான். அதை மிக அழகாகத் திரையில் கொண்டு வந்துள்ளார்.அவர் தந்த ஆதரவிற்கு நன்றி. பீட்டர் ஹெய்ன் மாஸ்டருக்கு நன்றி.அவர் மாதிரி ஒரு லெஜண்ட் நம் திரைத்துறையில் இருப்பது நமக்குப் பெருமை.வெற்றிமாறன் சார் அட்வைஸ் கேட்டால் நீங்கள் வாழ்க்கையில் வளர்வீர்கள்.அவர் தந்த வழிகாட்டுதலுக்கு நன்றி.நான் உங்களுடன் படம் செய்வதை என் வீட்டிலேயே யாரும் நம்பவில்லை எனக்கு நீங்கள் தந்த வாய்ப்புக்கு நன்றி.அனைவருக்கும் நன்றி என்றார்.
நடிகர் விஜய் சேதுபதி பேசியதாவது..,
விகர்னன் மிக அருமையாகப் பேசினார்.வெற்றிமாறன் மெண்டார் என்றார்கள்.பேச்சுக்கும் அவர்தான் மெண்டார் தான் போல. இந்தப்படத்தின் டிரெய்லர் பார்த்தேன் மிக மிகப் பிடித்திருந்தது.விடுதலை ஷூட்டிங்கில் இந்தப்படம் ஆரம்பிப்பதாகச் சொன்னார். மாஸ்க் கதை, எம் ஆர் ராதா, என ஒவ்வொரு ஐடியாவும் நன்றாக இருந்தது. இந்தவிழாவில் எல்லோரும் அட்டகாசமாகப் பேசினார்கள். ராமரில் ஆரம்பித்து எல்லோரும் அசத்தலாகப் பேசினார்கள். வெற்றிமாறன் மாஸ்கே இல்லாத எல்லோரையும் சமமாக நடத்தும் ஒரு மனிதர்.விடுதலை ஷூட்டிங்கில் வெற்றிமாறன் சாரிடம் ராமர் மாட்டியிருப்பதாக நினைத்தேன், ஆனால் அவர் பேசியதைக் கேட்டபிறகுதான் ராமரிடம்தான் வெற்றிமாறன் மாட்டியிருக்கிறார் எனத் தோன்றியது.கவினுக்கு வாழ்த்துகள். திரையில் அவர் வசீகரமாக இருக்கிறார்.அவரை திரையில் பார்க்கப் பிடித்திருக்கிறது.இன்று வித்தியாசமான கதையைத் தேர்ந்தெடுப்பதில் மேலே கீழே போகலாம்,ஆனால் இதுதான் பயிற்சி. இது நீண்டகாலம் தாங்கும் வாழ்த்துகள்.சின்னவயதில் பீச்சில் சிலை பார்த்தேன்.அப்புறம் ஆண்ட்ரியாவைப் பார்த்தேன். இன்னும் அப்படியே இருக்கிறார்.அதே அழகு.ருஹானி அழகாக இருக்கிறீர்கள். வாழ்த்துகள்.ஜீவி சார் நான் எந்தப்படம் கேட்டாலும் ஒத்துக்கொண்டதே இல்லை அவர் இசை ரொம்பப்பிடிக்கும். அவருடன் படம் செய்ய ஆசை. சொக்கலிங்கம் சாருக்கு வாழ்த்துகள். அர்ச்சனா நிறையப்படம் நடிக்க வாழ்த்துகள். படம் மிகப்பெரிய வெற்றிபெற வாழ்த்துகள் என்றார்.
விநியோகஸ்தர் அனீஷ் பேசியதாவது..,
இந்தப்படம் நான் பார்த்துவிட்டேன். ஆண்ட்ரியா மேடம் சொன்னது போல் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.படம் முழுக்க நெல்சன் சார் ஸ்டைல் இருக்கிறது.ரெடின் வரும் காட்சிகள் எல்லாமே சிரிப்போம்.ஜீவி சார் அசத்திவிட்டார்.வெற்றிமாறன் சார் உங்கள் பங்களிப்புக்கு நன்றி.கவின் சார் இந்தப்படத்திற்குப் பின் பெரியஇடத்திற்குச் செல்வீர்கள்.நவம்பர் 21 படம் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி என்றார்.
தயாரிபபாளர் தாணு பேசியதாவது..,
என் அகம் ஆளும் வெற்றிமாறன் உள்ளிட்ட குழுவினருக்கு வாழ்த்துகள்.மாஸ்க் படபாடல்களும் முன்னோட்டமும் எங்கெங்கும் வெற்றியைப் பெறட்டும்.வெற்றிமாறன் சிறப்பான படைப்பாளி,நண்பரைத் தயாரிப்பாளராக மாற்றியிருக்கும் மனதிற்காகவே வாழ்த்துகள். ஜீவி இசை எட்டுத்திக்கும் புகழ்பெறுகிறது.கவின் சிறப்பான நடிகராக மிளிர்கிறார்.அனைவரும் வெற்றி பெற வாழ்த்துகள் என்றார்.
ஃபைவ் ஸ்டார் கதிரேசன் பேசியதாவது..,
என் குடும்பவிழா போல் இருக்கிறது.எனக்கும் வெற்றிமாறன் சாருக்குமான நட்பு 20 ஆண்டுகளைக் கடந்து போய்க்கொண்டு உள்ளது. அவர் மேற்பார்வையில் படம் சிறப்பாக வந்துள்ளது. அதேபோல் ஜீவி பிரகாஷின் இசை படத்தை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.மிகக் கடுமையான உழைப்பாளி சொக்கலிங்கம். அவருக்கு இப்படம் வெற்றியைத் தர வாழ்த்துகள்.கவின் இளைஞர்களுக்குப் பிடிக்கும் ஹீரோ. வெற்றிப்படம் தர வாழ்த்துகள். ஆண்ட்ரியா மேடம் தயாரிப்பாளர் ஆகியுள்ளார் வாழ்த்துகள். இயக்குநருக்கு வாழ்த்துகள் படம் வெற்றி பெற வாழ்த்துகள் என்றார்.
நடிகர் கவின் பேசியதாவது..,
எங்களை வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி.என் லைஃபில் நான் நம்பும் விசயம்,அன்றன்று நாள் நல்லபடியாக போகவேண்டும் என்பதுதான்.அதில் செய்ய வேண்டியதையெல்லாம் செய்து முடித்தால்,எல்லாம் நன்றாக நடக்கும் என நம்புகிறேன்.விஜய் சேதுபதி அண்ணாவுக்கு நன்றி.அவரின் பீட்சா படத்தில்தான் நான் அறிமுகமானேன்.நாம் விரும்புவதை விருப்பத்துடன் செய்தால் அது நடக்கும் என நிரூபித்தவர்.அவர் வந்து வாழ்த்தியதற்கு நன்றி.வெற்றிமாறன் சார், அவரெல்லாம் கூப்பிடுவார் என நான் நினைத்ததில்லை.அவர் ஆபிஸில் இருந்து கால் வந்தது.அவரேதான் கதை சொன்னார், அவரே கதை சொல்கிறார் என்றால் அவர் கதை மேல் வைத்திருக்கும் நம்பிக்கை எனக்கு முக்கியமாகப் பட்டது.உங்களை நம்பி வருகிறேன் பார்த்துக்கொள்ளுங்கள் என்றேன்.இன்றுவரை பார்த்துக்கொண்டிருக்கிறார்.அவர் மிக ஜாலியானவர்.அவரை நான் நண்பராகவே நினைத்துவிட்டேன்.அவர் சொக்கலிங்கம் சார் பற்றி மிகப்பெருமையாகச் சொன்னார்.இந்தப்படம் ஜெயித்தே ஆகவேண்டும் என்றார்,அது ஆடுகளம் இண்டர்வெல் மாதிரி இருந்தது. கண்டிப்பாகப் பந்தயம் அடித்துவிடுவோம் சார்.ஆண்ட்ரியா மேடம்தான் முதலில் கதை கேட்டார்.அவர் நடிப்பு மிகச்சிறப்பாகப் பேசப்படும். ஜீவி சார் இத்தனை வேலைகளை எப்படிச் செய்கிறார் என ஆச்சரியமாக இருக்கும்.சார் உடலை பார்த்துக்கொள்ளுங்கள்.விகர்னன் மிகச்சரியாகப் பேசினார்.எல்லாவற்றையும் மிகச்சரியாகச் செய்து படத்தைக் காப்பாற்றித் தந்துள்ளார்.பவன் சார், ரெடின் சார் நடிப்பு கண்டிப்பாக பேசப்படும்.படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் நன்றி.நெல்சன் அண்ணன் வாழ்க்கையில் என்னைச் சரியாக வழிநடத்தி என்னைக் கூட இருந்து பார்த்துக் கொள்வதற்கு நன்றி.நவமபர் 21 படம் திரைக்கு வருகிறது.அனைவரும் பார்த்து இரசிப்பீர்கள் என நம்புகிறேன் நன்றி என்றார்.
இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது..,
மாஸ்க் படத்தை நான் புதிதாக ஒரு விசயம் பற்றி கற்றுக்கொள்ளவும், தெரிந்துகொள்ளவும் முடிந்த வாய்ப்பாக நினைக்கிறேன். ஆண்ட்ரியா ஒரு திரைக்கதை அனுப்பி இதைத் தயாரிக்கிறேன் என்றார்,அவர் தயாரிக்கும் அளவு என்ன கதை என்றுதான் படித்தேன். அதில் சில மூமெண்ட்ஸ் மிகமிகப் பிடித்திருந்தது.சொக்கலிங்கம் ஒரு படம் தயாரிப்பதாக இருந்தார்.நான் ஆண்ட்ரியாவுடன் சேர்ந்து தயாரியுங்கள் என்றேன்.அப்படித்தான் மாஸ்க் ஆரம்பித்தது.பின்னர் யாரையெல்லாம் இப்படத்தில் நடிக்க வைக்கலாம் என ஆரம்பித்து கவினை அழைத்தோம்.ஸ்டார் படத்திற்கு முன்பே அவரை இப்படத்தில் நடிக்கக் கேட்டோம்.விகர்னன் எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளித்து எளிதாகக் கையாள்வார்.அது எனக்குப் பிடித்திருந்தது.சொக்குதான் ஆர் டி ராஜசேகரை அழைக்கலாம் என்றார்.அவர் கிளைமாக்ஸுல் செய்த லைட்டிங் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.ஜீவி இப்படத்தில் செய்ய இசை மிகமிகக் கச்சிதமாக இருக்கிறது, மிக அற்புதமாக இருக்கிறது.விகர்னன் இப்படத்தில் பேப்பரில் இருந்ததை மிக அற்புதமாகத் திரைக்குக் கொண்டு வந்துள்ளார். கலை இயக்கம் அருமையாகச் செய்துள்ளார் ஐயப்பன். ராமர் மனதில் பட்டதை அப்படியே பேசக்கூடியவர்.அவர் கடைசி சிலநாட்களில் அவர் எடிட் செய்த விசயம் மிக நன்றாக இருந்தது.நடிகர்கள் எல்லோர் நடிப்பும் ஸ்பெஷலாக இருந்தது.பவன் டான்ஸ் அருமையாக இருந்தது. நெல்சன் இதில் வாய்ஸ் ஓவர் செய்துள்ளார்.சமீபத்தில் நான் சினிமாவில் பார்த்ததில் நிஜமான மனிதர்,மனதில் பட்டதைப் புண்படாமல் சொல்பவர்.மாஸ்க் படம் மூலம் அவரிடம் நிறையப் பேசினேன்.கவின்தான் அதற்குக் காரணம்.கவின் அவருக்குத் தம்பி மாதிரி.அவர் அறிவுரை இப்படத்தில் இருக்கிறது.சொக்கலிங்கம் நான் அஸிஸ்டெண்ட்டாக இருக்கும்போது அவர் அஸிஸ்டெண்ட் மேனேஜர்.மிகவும் அர்ப்பணிப்பான உழைப்பாளி.அவர் தயாரிப்பாளராக மாறியிருப்பது மகிழ்ச்சி.ஆண்ட்ரியா இப்படத்தை ஏன் தயாரிக்கிறீர்கள்? இது நெகடிவ் பாத்திரம், இந்தக்கதை ஏன் என்றேன். இது செய்தால் இதுமாதிரி ரோல்தான் வரும் என்றேன்.இப்போதும் யாரும் என்னைக் கூப்பிடவில்லை இந்தக்கதை எனக்குப் பிடித்திருக்கிறது.நான் செய்கிறேன் என்றார்.இருவரும் ஜெயிக்கவேண்டும் என ஆசைப்படுகிறேன் வாழ்த்துகள்.படத்தில் எல்லாக் கலைஞர்களும் மிகச்சிறப்பாகப் பணியாற்றியிருக்கிறார்கள்.எம் ஆர் ராதா சார் ஒரு ரிபெல்,அவர் நிறைய விசயங்களைப் பேசியிருக்கிறார்.அவர் இந்தப்படத்திற்குள் வந்தது மிக மகிழ்ச்சி.ராதாரவி சாரிடம் அனுமதி கேட்டேன்,அவர் நன்றாகக் காட்டுவீர்கள் என்றால் ஓகே என்றார் நன்றி.எம் ஆர் ராதா பேசிய விசயம்தான் இப்படத்தின் ஆன்மாவாக இருக்கிறது.குரலற்றவர்களின் குரல்தான் இந்தப்படம்.எல்லோருக்கும் நன்றி.
இவ்வாறு அவர் பேசினார்.












