சினிமா செய்திகள்

ஈழத்தமிழராக ஜெயம்ரவி? – புதியபட விவரங்கள்

ஜெயம்ரவி இப்போது பொன்னியின்செல்வன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அப்படத்தில் அவருடைய பகுதிகள் நிறைவடைந்துவிட்டதென அண்மையில் அறிவித்திருந்தார்.

பொன்னியின்செல்வன் படத்தைத் தொடர்ந்து அகமது இயக்கத்தில் அவர் நடித்துக் கொண்டிருந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படத்தின் படப்பிடிப்புக்காக வெளீநாடு செல்வதில் நிறைய இடையூறுகள் இருப்பதால் அப்படத்தின் படப்பிடிப்பு காலவரையற்று தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

எனவே, அவர் அடுத்து பூலோகம் பட இயக்குநர் கல்யாண் இயக்கும் புதியபடத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவிருக்கிறார்.இப்படத்தை ஸ்கிரீன்சீன் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தின் கதை,இயக்குநர் கல்யாணின் குருநாதர் எஸ்.பி.ஜனநாதனின் அடியொற்றி பொதுவுடைமைச் சிந்தனை அடிப்படையில் எழுதப்பட்டிருக்கிறதாம்.

கடல் மற்றும் கடல் சார்ந்த வாழ்வை அடிப்படையாகக் கொண்ட கதையாம்.

இதனால் இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு குஜராத் துறைமுகம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் தொடங்கவிருக்கிறதாம். அதைத் தொடர்ந்து தூத்துக்குடி துறைமுகப் பகுதிகளில் நடக்கவிருக்கிறதாம்.

குஜராத் மற்றும் தூத்துக்குடி துறைமுகப்பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தக் காரணம் இருக்கிறதாம். அங்கு துறைமுகம் மற்றும் கடல்பகுதிகளில் ஏராளமான பனைமரங்கள் இருப்பதால் அவ்விடங்களைத் தேர்வு செய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இதனால் இந்தப்படத்தின் கதைக்களம் தமிழீழம் சார்ந்து அமைந்திருக்கிறது என்கிறார்கள். அதன் காரணமாக இப்படத்தில் ஜெயம்ரவி ஈழத்தமிழராக நடிக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.

Related Posts