Home Archive by category Uncategorized (Page 19)

Uncategorized

Uncategorized

மத்திய அரசைக் கண்டித்து விஜய் மக்கள் இயக்கம் அறிக்கை

விஜய் நடித்த ‘பிகில்’ படத்தைத் தயாரித்த ஏ.ஜி.எஸ். பட நிறுவன அலுவலகங்கள் மற்றும் நிதியாளர் மதுரை அன்புச்செழியன் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு கைப்பற்ற ஆவணங்களின் அடிப்படையில் நெய்வேலியில் நடந்த ‘மாஸ்டர்’ படப்பிடிப்புத் தளத்துக்குச் சென்று விஜய்யை
Uncategorized

அரண்மனை 3 படப்பிடிப்புக்குக் கிடைத்த புதிய அரண்மனை

அரண்மனை, அரண்மனை ஆகிய இரண்டு படங்களும் பெரிய வெற்றி பெற்ற படங்கள். சுந்தர்.சி இயக்கி நடித்த அப்படங்கள் வெற்றி பெற்றதன் விளைவு இப்போது அப்படத்தின் 3 ஆம் பாகம் தயாராக உள்ளது. அரண்மனை படத்தில், ஹன்சிகா, ஆண்ட்ரியா, சந்தானம், ராய் லட்சுமி, கோவை சரளா ஆகியோரும் அரண்மனை 2 படத்தில், சித்தார்த், திரிஷா, ஹன்சிகா, பூனம் பாஜ்வா, கோவை சரளா, சூரி ஆகியோரும் நடித்து இருந்தனர். அரண்மனை 3
Uncategorized

இளையராஜா இசையை முழுமையாக நிராகரித்த இயக்குநர்

காக்காமுட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களைத் தொடர்ந்து மணிகண்டன் இயக்கும் படம் கடைசி விவசாயி. இந்தப் படத்தில் நல்லாண்டி என்ற பெரியவர் தான் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். விஜய் சேதுபதி மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. படத்தின் இறுதிக்கட்டப் பணிகள்
Uncategorized

விஜய் கைது செய்யப்பட்டுள்ளாரா? – விடை தெரியாத மர்மம்

நடிகர் விஜய் நடித்த ‘பிகில்’ படத்தைத் தயாரித்த ஏஜிஎஸ் நிறுவன அலுவலகம், வீடு உள்ளிட்ட 20 இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக நெய்வேலி நிலக்கரிச் சுரங்கம் பகுதியில் ‘மாஸ்டர்’ படப்பிடிப்பில் இருந்த விஜய்யிடம் 6 பேர் அடங்கிய வருமான வரித்துறை அதிகாரிகள் குழு நேரில் சென்று விசாரணை நடத்தியது. அப்போது தங்களுடன்
Uncategorized

தயாரிப்பாளரானார் அருள்தாஸ்

ஒளிப்பதிவாளராகத் தன் பயணத்தைத் தொடங்கி நடிகராகப் புகழ்பெற்றிருப்பவர் அருள்தாஸ். அவர் இப்போது தயாரிப்பாளராகவும் மாறியிருக்கிறார். அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாக நடிக்கும் புதியபடத்தை அவர் தயாரிக்கவிருக்கிறாராம்.  இந்தப்படத்தை மதயானைக்கூட்டம் படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாரன் இயக்குகிறாராம். மதயானைக்கூட்டம் படத்துக்குப் பிறகு அவர் இராவணகோட்டம் என்றொரு படத்தைத் தொடங்கினார்.
Uncategorized

எனக்கும் ஹிப்ஹாப் ஆதிக்கும் கருத்துவேறுபாடா? – சுந்தர்.சி விளக்கம்

‘நான் சிரித்தால்’ படத்தின் விளம்பர நிகழ்ச்சி பிப்ரவரி 4 ஆம் தேதி மாலை நடந்தது. நிகழ்ச்சியில் கதாநாயகி ஐஸ்வர்யா மேனன், சாரா, ஆஷிக், சுஜாதா, ‘படவா’ கோபி, கதிர், சத்யா, ‘எரும சாணி’ விஜய் உள்ளிட்ட படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். படத்தின் தயாரிப்பாளர் நடிகை குஷ்பூ பேசும்போது,,,, நாங்கள் ‘நான் சிரித்தால்’ படத்தின் மூலம் ஹாட்ரிக்
Uncategorized

குலதெய்வம் கோயிலில் யோகிபாபு திருமணம்

தமிழ்த் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருப்பவர் யோகிபாபு. கதாநாயகனாகவும் சில படங்களில் நடிக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு யோகி பாபுவுக்குத் திருமணம் முடிவாகிவிட்டது என்றும், பிப்ரவரி முதல் வாரத்தில் திருமணம் என்றும் தகவல் பரவியது. மணமகள் பெயர் பார்கவி என்று பெயருடன் செய்தி வெளியானதால், இது உண்மை என்று பலரும் யோகி பாபுவுக்கு வாழ்த்து தெரிவிக்கத்
Uncategorized

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு – உலகெங்கும் கொண்டு சேர்க்கும் நடிகர்

தஞ்சை பெருவுடையார் கோயிலை மாமன்னன் இராசராச சோழன் 1010 ஆம் ஆண்டு கட்டினார். இந்தக் கோயில் கட்டி முடிக்கப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் கடந்து விட்டது. கடைசியாக 1997 ஆம் ஆண்டு பெரியகோவில் குடமுழுக்கு நடைபெற்றது. 23 ஆண்டுகளுக்குப்பிறகு பெரியகோவில் குடமுழுக்கு இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இதையொட்டி கடந்த 2 ஆண்டுகளாக தொல்லியல் துறை, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல்வேறு
Uncategorized

பாஜகவை எதிர்க்கும் சிம்பு – பட அறிவிப்பால் பரபரப்பு

2028 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட சிம்புவின் மாநாடு படம் தள்ளிப்போய், 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கும் என்று அறிவிப்பு வெளியானது. ஆனால் காலமும் நேரமும் கடந்து கொண்டே போவதால், மாநாடு படத்திலிருந்து சிம்பு நீக்கப்பட்டதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்தார். மாநாடு படம் கைவிடப்படுவதாக செய்திகள் வெளியான நிலையில் ‘மகா மாநாடு’ என்ற படத்தைத் தானே
Uncategorized

தர்பார் நட்டம் – அசிங்கமாகப் பேசிய முருகதாஸ் உதவியாளர்

ரஜினி நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்த படம் தர்பார். இப்படம் சனவரி 9 ஆம் தேதி வெளியானது. பொங்கல் திருநாளையொட்டி இப்படம் வெளியானதால் சுமார் பத்து நாட்கள் விடுமுறை இருந்ததென்பதால் நல்ல வசூல் கிடைக்கும் என்று நம்பி பெரும்தொகை கொடுத்து படத்தை வாங்கி வெளியிட்டார்கள் விநியோகஸ்தர்கள். ஆனால், எல்லாப் பகுதிகளிலும் படத்துக்கு நட்டம் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் பல