செய்திக் குறிப்புகள்

இனி அஜீத் வழி இல்லை நடிகர் ஜெய் திடீர் முடிவு

ஜெய், கேத்தரின் தெரசா, ராய்லட்சுமி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் எல்.சுரேஷ் இயக்கிருக்கும் படம் நீயா 2′. ஜம்போ சினிமாஸ் சார்பில் ஸ்ரீதர் தயாரித்திருக்கும் இந்தப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று (மார்ச் 9,2019) நடந்தது.

அந்நிகழ்வில் இயக்குநர் வெற்றி மாறன் பேசும்போது….

பாலுமகேந்திரா சாரிடம் சுரேஷும் நானும் ஒன்றாகப் பணியாற்றியிருக்கிறோம்.அவர் தொடர்ந்து போராடிக்கொண்டே இருப்பார். சுரேஷ் சோர்வடைந்து நான் பார்த்தது கிடையாது. எந்த சூழ்நிலையிலும் உறுதியைக் கைவிடமாட்டார். வெற்றிக்கு எது ஏற்றதோ அதை சிறப்பாக செய்யகூடிய ஆற்றல் அவரிடம் இருக்கிறது. இப்படத்தைப் பார்க்கும் போது வெற்றியடையும் என்று தோன்றுகிறது.

ராய் லட்சுமி பேசும்போது..

2 வருடங்களுக்குப் பிறகு தமிழில் நடிக்கிறேன். சுரேஷ் கதை கூறினார். 3 மணி நேரம் கதை கேட்ட பிறகு இது பெரிய படமாக இருப்பது போல் உள்ளது. கவனத்துடன் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பொறுமையாக ஆலோசித்து முடிவெடுத்தேன்.இது பாம்பை மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம். இப்படத்தில் காதல், திரில்லர் அதனுடன் பாம்பு கதையும் இருக்கிறது. இப்படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி.

இயக்குநர் எல். சுரேஷ் பேசும்போது..

பாலுமகேந்திராவிடம் நானும் வெற்றிமாறனும் உதவியாளராக இருந்தோம். எனது முதல் படம் தெலுங்கு. அதன் தமிழ்ப் பதிப்பு தான் ‘எத்தன்’.

ஒரு இயக்குநருக்கு படம் என்பது எந்தளவு முக்கியம் என்று அவர்களுக்கு மட்டுமே தெரியும். அதேபோல் என் முயற்சியின் மேல் எனக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது.

ஒருநாள் ஒரு நண்பர் பாம்பு கதை பண்ணனும் என்று கூறினார். பாம்புக்கு எப்படி கதை பண்ணுவது என்று யோசிக்கும்போது தொலைக்காட்சியில் ‘நாகினி’ தொடரைப் பார்த்தேன். சிறப்பாக ஓடிக்கொண்டிருந்தது.

பிறகு தான் இந்தக் கதை தோன்றியது. ‘நீயா’ படத்தில் நிஜ பாம்பை தான் காட்டியிருப்பார்கள். அதேபோல் இப்படத்திலும் ராஜநாகத்தை வைத்து இயக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அதற்காக பாம்பைப் பற்றி தெரிந்துகொள்ள பாங்காக்கிற்கு சென்றோம். அங்கு ராஜநாகத்தை வீட்டில் வைத்து வளர்த்து வருகிறார்கள்.

ஒரு நண்பரிடம் பாம்பு படத்தை காட்டினேன். அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. நிஜ பாம்பு இப்படி இருக்காது என்றார். பாங்காக்கில் இருக்கும் பாம்பின் படம் தான் இது என்றேன். ஆகையால் இப்படத்தில் கிராபிக்ஸ் இல்லாமல் நிஜ பாம்பை தான் காட்டியிருக்கிறோம்.

வரலக்ஷ்மிக்கு கடினமான கதாபாத்திரம் கொடுத்திருக்கிறோம். அவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

‘எத்தன்’ முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக இருந்தது. இப்படம் ரொமான்டிக் திரில்லராக இருக்கும். இப்படம் பெரியதாக அமையக் காரணம் ஜெய், கேத்தரின் தெரசா, வரலக்ஷ்மி, ராய் லக்ஷ்மி தான். அவர்களைக் கொடுத்த தயாரிப்பாளருக்கு நன்றி.

நாயகன் ஜெய் பேசும்போது…

தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும். வேறு படத்தின் படப்பிடிப்பில் இருந்ததால் தாமதமாகிவிட்டது. இப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள். வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி என்றார்.

நடிகர் ஜெய் அஜீத் நயன்தாரா ஆகியோர் பாணியில் தாங்கள் நடித்த படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை என்று முடிவோடு இருந்தார்.

அந்த முடிவை மாற்றிக் கொண்டு இந்த நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டது திரையுலகில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts