ஒற்றைச் சொல்லில் மோடி அரசை அசைத்த ஏ.ஆர்.ரகுமான்
அண்மையில் மோடி அரசு அறிவித்த புதிய கல்விக் கொள்கைக்கு பலத்த எதிர்ப்பு. புதிய கல்விக் கொள்கை தொடர்பாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ட்வீட் செய்திருந்தார்.
புதிய கல்விக் கொள்கையில் இருந்த மும்மொழி பாடத் திட்டத்திற்கு எதிராக குரல் எழ ட்விட்டரில் தமிழ்நாடு இந்தி திணிப்புக்கு எதிராக உள்ளது என்ற ஹேஸ்டேக்ட்ரெண்டானது. பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் இதற்கு எதிராகக் குரல் கொடுத்தனர்.
அப்போது மரியான் படத்தில் இடம்பெற்ற பாடலை பஞ்சாபி பாடகர் ஒருவர் பாடுவதைப் பகிர்ந்து தமிழ் பஞ்சாபில்கூட வளர்கிறது எனப் பதிவிட்டிருந்தார்.
இதற்கிடையில் மும்மொழிக் கொள்கைக்கு தமிழ்நாடு, கர்நாடகம் என பரவலாக எதிர்ப்பு கிளம்பு கல்வி வரைவு திட்டத்தில் இந்தி கட்டாயமல்ல என்று மாற்றம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏ.ஆர்.ரகுமான், “அழகிய தீர்வு தமிழகத்தில் இந்தி கட்டாயமல்ல… திருத்தப்பட்டது வரைவு!” என ட்வீட் செய்திருந்தார்.
தற்போது தமிழில் தன்னாட்சி என பொருள்படும் ‘Autonomous’ வார்த்தை குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ட்வீட் செய்துள்ளார்.
‘Autonomous’ என்னும் ஆங்கில வார்த்தைக்கு கேம்பிரிட்ஜ் அகராதியில் என்ன பொருள் என்பதை அதற்கான சுட்டியுடன் பகிர்ந்துள்ளார்.
இது தற்போது விவாதப் பொருளாகியுள்ளது. பலரும் ஏ.ஆர்.ரகுமான் on fire என்று ட்வீட் செய்து வருகிறார்கள். அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
ஒற்றைச் சொல்லில் மிருக பலம் வாய்ந்த மத்திய அரசை விமர்சித்து தெறிக்கவிட்டிருக்கிறார் என்றும் பாராட்டுகிறார்கள்.











