வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி ஐதராபாத்தில் தொடர்ந்தது. கொரோனா சிக்கல் காரணமாக அந்தப் படப்பிடிப்பு தடைபட்டது. ஊரடங்கு நீண்டு கொண்டிருக்கும் நிலையில் அப்படத்தைத் தொடர்ந்து எடுக்கும் முடிவை படக்குழு கைவிட்டுவிட்டதாகத் தெரிகிறது.
வெங்கட்பிரபு இயக்கத்தில், சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘மாநாடு’. இப்படத்தில் பாரதிராஜா, எஸ்ஏ சந்திரசேகர் , பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.இப்படத்துக்கு இசை யுவன்ஷங்கர் ராஜா,ஒளிப்பதிவு ரிச்சர்ட் எம் நாதன், படத்தொகுப்பு பிரவீன் கே.எல். இப்படம் பல்வேறு தடைகளைத் தாண்டி பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கப்பட்டது.சென்னையில் சில நாட்கள்
வெங்கட்பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் பலர் நடிக்கும் ‘மாநாடு’ படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் பட்டியலை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நேற்று வெளியிட்டார். படத்தின் இசையமைப்பாளர், கதாநாயகி, மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் யார், யார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மேலும், அடுத்த சில நாட்களில் சில முக்கியமான
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பதாகச் சொல்லப்பட்ட மாநாடு படத்தைக் கைவிடுவதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்தார். ஆகஸ்ட் 8 ஆம் தேதி இந்த அறிவிப்பு வெளியானது.தற்போது, மாநாடு பட பிரச்சினை குறித்து தயாரிப்பாளர்கள் சங்கத்தில் சமரச பேச்சுவார்த்தைகள் நடந்தன. இதில் சத்யஜோதி தியாகராஜன், கே.ராஜன், சிவசக்தி பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது சிம்பு தரப்பில்
அமைதிப்படை-2, கங்காரு ஆகிய படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ், தற்போது மிக மிக அவசரம் என்கிற படத்தைத் தயாரித்துள்ளது. விரைவில் இந்தப்படம் வெளியாகவுள்ள நிலையில், இதையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்க, ‘மாநாடு’ என்கிற படத்தை இந்த நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் கதாநாயகியாக பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் மகள் கல்யாணி
சிம்பு நடிப்பில் பிப்ரவரி 1,2019 அன்று வெளியான படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’. இந்தப் படத்துக்குப் பிறகு ‘மாநாடு’ படத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தை, வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கப்போவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. சிம்புவின் பிறந்த நாளான பிப்ரவரி 3 ஆம் தேதி இந்தப் படத்தின் பூஜை பிரமாண்டமாக
செக்கச் சிவந்த வானம் படத்தை முடித்த கையோடு அதிரடியில் இறங்கியுள்ளார் கோலிவுட்டின் மிகத் திறமையான நடிகர் சிம்பு. இன்றைய ஜல்லிக்கட்டின் வெற்றியை மகிழ்ச்சியோடு தமிழர்கள் கொண்டாடுகின்றனர். ஆனால் அதன் தொடக்கம் சிம்புதான். முதல் ஆளாகத் தனது வீட்டு வாசலில் உட்கார்ந்து போராடத் தொடங்கிய தமிழன். ஆனால் நான்தான் தொடங்கினேன் என எங்கும் இதுவரை மார்தட்டிக் கொள்ளவில்லை. மக்கள் நன்மைகளை


















