கொரோனா அச்சுறுத்தலால் சுமார் 70 நாட்களுக்குப் பிறகு சின்னத்திரை படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக படப்பிடிப்புத் தளத்தின் புகைப்படங்கள் மற்றும் காணொலிகள் வெளியாகியுள்ளன. இதனிடையே சின்னத்திரை சங்கத்தின்
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மார்ச் 19 ஆம் தேதி முதல் திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் இரத்து செய்யப்பட்டிருந்தன. இதனால் திரைப்படத் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தனர். மே 11 முதல் படப்பிடிப்புகளுக்குப் பின்பான பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதேபோல் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்கக்கோரி அரசிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.













