தமிழ்த்திரையுலகில் கடந்த நாற்பதாண்டுகளாக முக்கியப் புள்ளியாக இருந்து கொண்டிருப்பவர் திருப்பூர் சுப்பிரமணியம். திரையரங்கு உரிமையாளர், திரைப்பட விநியோகஸ்தர் ஆகிய அவர், விநியோகஸ்தர்கள் சங்கம் மற்றும் திரைப்பட உரிமையாளர்கள் சங்கம் உட்பட பல்வேறு சங்கங்களில் பொறுப்பு வகித்தவர். அண்மையில்,தென்னிந்திய
திரைப்படத் துறையில், அதிகமாக முதலீடு செய்பவர்களான சினிமா பைனான்சியர்களுக்காக ஒரு அங்கீகரிக்கப்பட்ட சங்கம் பிப்ரவரி 6,2019 அன்று உதயமானது. தென்னிந்திய திரைப்பட பைனான்சியர்கள் சங்கம் (South Indian Film Financiers Association – SIFFA) என்று பெயரிடப்பட்ட அந்தச் சங்கத்தின் அறிவிப்பு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில், ராஜா, அபினேஷ்













