திரைத்துறையில் வெற்றி பெற நிறமும் பணமும் முக்கியமன்று திறமையும் உழைப்பும் இருந்தால் போதும் என்பதற்கு உதாரணமாக இருக்கும் நடிகை சரண்யா ரவிச்சந்திரன். அண்மையில், ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான ஜெயில் படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்திருக்கும் அவரிடம்
திருச்சி அருகே உள்ள கே.கள்ளிக்குடி என்ற கிராமத்தில் பிறந்து,அங்கேயே காவேரி கல்லூரியில் பி.எசி.மைக்ரோபயாலஜி படித்த பின், சென்னையில் வேலை கிடைத்துவிட்டதாகப் பொய்சொல்லிவிட்டு சென்னை வந்தவர், கலகலப்பான பேச்சுக்காகவே தீரன் மற்றும் எம்.கே தொலைக்காட்சி உட்பட சில இடங்களில் தொகுப்பாளராகப் பணிபுரிந்தவர், கறுப்பு நிறம் என்பதால் பிரபலமாக முடியாது என்று பலரால் விமர்சிக்கப்பட்ட













