காதலில் தோல்வியடையும் இளைஞர் ஒருவர் அதனால் சித்தம் கலங்கிப் போகிறார். அதற்கு சிகிச்சை எடுக்கும் நேரத்தில் அவருக்குப் புதிய சிந்தனை தோன்றுகிறது. அதை நண்பர்களுடன் சேர்ந்து செயல்படுத்த எண்ணிக் களமிறங்குகிறார். அந்தப் புதிய சிந்தனை என்ன? அதைச் செயல்படுத்த நினைக்கும்போது என்னவெல்லாம் நடக்கிறது?
ஒரு படத்தை மூன்று பாகங்களாக எடுக்கத் திட்டமிட்டு அதன் இரண்டாம்பாகத்தை முதலில் வெளியிட்டிருக்கிறார்கள். அந்தப்படம் பிராஜெக்ட் சி பாகம் 2. புதுமுக நாயகன் ஸ்ரீ, விஞ்ஞானியாக ராம்ஜி, விஞ்ஞானி வீட்டு வேலைக்காரம்மாவாக வசுதாகிருஷ்ணமூர்த்தி, மருத்துவராக சாம்ஸ் ஆகியவர்களோடு மேலும் ஓரிரு கதாபாத்திரங்கள் மட்டுமே வைத்து படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் வினோ. நாயகன் ஸ்ரீ
பயிற்சிக் காவலர் அருள்நிதி பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்படாமல் மூடிவைக்கப்பட்ட ஒரு பழைய வழக்கைக் கையிலெடுக்கிறார். அந்த வழக்கு பல்வேறு மர்ம முடிச்சுகள் கொண்டதாக இருக்கிறது. அதை அவர் எப்படிக் கையாள்கிறார்? இறுதியில் என்ன நடக்கிறது? என்பதைத் திகில் கலந்து சொல்லியிருக்கும் படம் டைரி. காவல்துறை வேடத்துக்குக் கனகச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார் அருள்நிதி. அழுத்தமான
பல ஆண்டுகளாகப் பூட்டிக்கிடக்கும் ஒரு மருத்துவமனைக்குள் சில மாணவ மாணவிகள் செல்கின்றனர். பேய் இருக்கிறதா? இல்லையா? என்பதை மக்களுக்குச் சொல்வதற்காக அனைவரும் ஒளிப்பதிவுக் கருவிகளுடன் அதற்குள் செல்கின்றனர். அங்கு நடப்பவற்றை நேரலையாக ஒளிபரப்பும் செய்கின்றனர். அங்கு என்னவெல்லாம் நடக்கிறது? என்பதைப் பயத்துடன் பார்க்க வைத்திருக்கிறார்கள். தேங்காய்சீனிவாசன் பேரன் யோகி, சரண்ராஜ் மகன்
ஏற்கனவே பல அரசியல் திரைப்படங்கள் வெளியாகியிருந்தாலும், சற்று வித்தியாசமான அரசியல் படமாக உருவாகியிருக்கிறது ‘ஆபரேஷன் ஜுஜுபி’ (Operation JuJuPi). அனைவரும் புரிந்து கொள்ளும் இந்திய ஆங்கிலப் படமாக வெளியாகியுள்ளது. நகைச்சுவை நடிகராக வலம்வரும் சாம்ஸ், இந்தப்படத்தில் கதையின் நாயகன். அவர், இந்த நாட்டின் சிஸ்டம் சரியில்லை என்று கவலைப்படுகிறார். இது குறித்து தனது நண்பர்களிடம் அவர்
















