பெரும் வனத்தையொட்டிய ஒரு கிராமத்தில், சின்னச் சின்னத் திருட்டுகள் செய்து கொண்டு குடியும் கூத்துமாக இருக்கிறார் நாயகன் ஜீ.வி.பிரகாஷ். ஒருநாள் திருடப்போன இடத்தில் நாயகி இவானாவைப் பார்க்கிறார்.பார்த்தவுடன் அவர் மீது காதல் கொள்கிறார்.இவானாவோ, நீயே ஒரு திருடன் நீ என்னைக் காதலிப்பதா? என்று ஏளனம்












