கிராமப் புறங்களிலிருந்து பல கனவுகளோடு படித்துப்பட்டம் வாங்க வேண்டும் என்று நகரத்துக்கு வந்து கல்லூரியில் சேருகிறார்கள் பல மாணவர்கள். அவர்களின் வாழ்க்கையை தங்கள் சுயநலத்துக்காக வேட்டையாடும் கொடிய மனிதர்களை அடையாளம் காட்டுகிற படம் மயூரன். அஞ்சன், பாலாஜி ராதாகிருஷ்ணன், அமுதவாணன் ஆகியோர் மாணவர்களாக
இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய நந்தன் சுப்பராயன் எழுதி இயக்கியிருக்கும் படம் மயூரன். மயூரன் என்றால் விரைந்து உன்னைக் காக்க வருபவன், வெற்றி புனைபவன் என்று பொருள். ஒரு கல்லூரி விடுதியைக் கதைக்களமாகக் கொண்ட படம். கல்லூரி விடுதியில் நடக்கும் சட்டத்திற்கு புறம்பான செயல்களையும் அதன் நிழல் உலகத்தையும் சொல்லும் விதமாக அமைந்துள்ளது. சிதம்பரம் நகரில் உள்ள கல்லூரி













