ஆகஸ்ட் 24 அன்று வெளியான மேற்குத் தொடர்ச்சி மலை படத்துக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு. திரைத்துறையினரும் அப்படத்தை மனமாரப் பாராட்டுகிறார்கள். ஆணதேவதை பட இயக்குநர் தாமிரா அப்படத்தைப் பற்றிக் கூறியிருப்பதாவது…. இத்தனை இயல்பான கதையை,மனிதர்களை நிலக்காட்சியை தமிழ்த்திரை இதுவரை கண்டதில்லை.
அதிகாலை நான்கு மணிக்கு மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள கிராமத்தில் கண் விழிக்கும் நாயகன் ரங்கசாமியின் (நடிகர் ஆண்டனி) நிழல் போல, அல்ல அல்ல உடல் போலவே தேனி ஈஸ்வரின் ஒளிப்படக் கருவி பயணிக்கிறது. கண்களுக்கு விருந்து என்று வியக்கும் மலைகளின் உடல் வழியே நரம்புகள் போல அமைந்த ஒற்றையடிப் பாதையில் நம்பிக்கையும் அன்பும் கலந்து மொழியும் மனிதர்களை நமக்குக் காட்டியபடியே













