பள்ளிக்காலத்தில் காதல் எனும் பொருந்தாக் கதை என்றாலும் அதைப் பொருத்தமாகச் சொல்வதில் தேர்ச்சி பெற்றிருக்கிறது மறக்குமா நெஞ்சம். பள்ளிப்படிப்பை முடித்து பத்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தேர்வெழுத வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.அதனால் எல்லோரும் பதட்டமாக நாயகன் ரக்சனுக்கு மட்டும் சந்தோசம். அது ஏன்?












