நாயகன் கலையரசன் மற்றும் நாயகி தீபா பாலு ஆகியோர் கைபேசி மூலம் காதலர்களாகிறார்கள்.பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொள்கிறார்கள்.நாயகி கர்ப்பமாகிறார்.அவருக்கு தன்னுடைய ஊர் வழக்கப்படி நிறைசூலி கடவுளுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்ய நினைக்கிறார் கலையரசன்.நாயகியும் ஒப்புக்கொண்டு உடன்
இது யூடியூப் காலகட்டமாக இருக்கிறது.நவீன கைபேசி வைத்திருக்கிற எல்லோருமே யூடியூபர்களாக உருமாறிக் கொண்டிருக்கிறார்கள்.பல இலட்சக்கணக்கானவர்களோடு போட்டி போட வேண்டியிருப்பதால் தங்கள் அந்தரங்க விசயங்களைக் கூடப் பகிர்ந்து கொள்கிற நிலைக்குச் செல்கிறார்கள்.அதனால் பல தப்பான விளைவுகள் ஏற்படுகின்றன. இதை மையமாக வைத்து அப்படிச் செய்பவர்களுக்கு எச்சரிக்கை செய்யும் விதமாக
இயக்குநர் சிவராஜ் இயக்கத்தில்,கலையரசன், பிரியாலயா உட்பட பலர் நடிப்பில், இன்றைய சோஷியல் மீடியா உலகின் முகத்தைக் காட்டும், பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ள படம் “டிரெண்டிங்”. இப்படத்தில், கலையரசன் நாயகனாக நடிக்க, பிரியாலயா நாயகியாக நடித்துள்ளார்.பிரேம்குமார் பெசன்ட்ரவி, வித்யா போர்கியா,ஷிவன்யா பிரியங்கா, கௌரி,பாலாஜி தியாகராஜன் தயாளன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில்
தமிழ்நாட்டின் பிறபகுதிகளிலிருந்து சென்னைக்கு வாழ வந்திருப்போரை அவர்களது சொந்த ஊரில் மெட்ராஸ்காரன் என்று அழைப்பார்கள்.அப்படிப்பட்ட ஒருவரைக் கதைநாயகனாகக் கொண்டிருப்பதால் இந்தப்படத்துக்கு அந்தப்பெயர். சென்னையில் வசிக்கும் நாயகன் ஷேன் நிகம், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தன்னுடைய சொந்த கிராமத்தில் தனது திருமணத்தை நடத்த விரும்புகிறார். அதற்கான வேலைகள் உற்சாகமாக
நடிகர்கள் ஜூனியர் என்.டி.ஆர்., ஜான்வி கபூர், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘தேவரா’. கொரட்டாலா சிவா இயக்கியிருக்கிறார். இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் பான் இந்தியா படமாக செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகிறது. அதையொட்டி செப்டம்பர் 17 அன்று இப்படக்குழுவினரின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில்தயாரிப்பு
நான் வெட்ட வெட்டத் தழைப்பேன் இறப்பினில் கண் விழிப்பேன் மரங்களில் நான் ஏழை எனக்கு வைத்த பெயர் வாழை என்று ஏட்டில் கவி வடித்தார் கவிஞர் மு.மேத்தா. அந்தப் பெயரை வைத்து திரையில் கவி படித்திருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். திருநெல்வேலி மாவட்டம் புளியங்குளம் கிராமம் அழகானது.அதன் வாழ்க்கை அப்படியன்று. வறுமையும் ஏழ்மையும் பின்னிப் பிணைந்த வாழ்வில் உரிமைப் போராட்டத்தில் உயிரை
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படங்களுக்குப் பிறகு இயக்குநர் மாரி செல்வராஜ் தனது நான்காவது படைப்பாக இயக்கியுள்ள படம் வாழை. நவி ஸ்டுடியோஸ் (Navvi Studios) நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க,டிஸ்னி ஹாட்ஸ்டார் மற்றும் மாஸ்டர் பிளான் புரொடக்சன் ஆகிய நிறுவனங்கள் வழங்கும் இப்படத்தை, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. புதுமுக


















