பட்டாம்பூச்சி என்கிற பெயரைப் பார்த்ததும் சுந்தர்.சியின் நகைச்சுவை கலந்து ஓர் அழகான காதல் கதையாக இருக்கும் என்று எதிர்பார்த்தால் ஏமாந்து போவீர்கள். அப்பாவால் ஒதுக்கப்பட்ட ஓர் இளைஞனின் மனப்பிறழ்வால் அதிரவைக்கும் இரத்தத் தெறிப்புகளுடன் தொடக்கம் முதல் இறுதிவரை படபடப்புடனே வைத்திருக்கிறார்கள்.












