தமிழ்த் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் டி.இமான். கிராமத்து இசை, மெல்லிசை,துள்ளல் பாடல்கள் என அனைத்து வகைகளிலும் கலக்கக்கூடியவர். அவரது இசையில் வெளியான மைனா, கும்கி, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா, ரோமியோ ஜூலியட், அண்ணாத்த, விஸ்வாசம் உள்ளிட்ட பல படங்கள் முழு ஆல்பம் பெரும்
உலகிலேயே முதல் முறையாக திரையரங்குகளில் தணிக்கைச் சான்றிதழ் உடன் முதல் பார்வை வெளியிடப்பட்டு சாதனை படைத்த இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் முற்றிலும் மாறுபட்ட, குழந்தைகளை மையமாகக் கொண்ட சாகச திரில்லரான ‘டீன்ஸ்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் சென்னையில் ஏப்ரல் 6 அன்று வெளியிடப்பட்டது. டிரெய்லரை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்டார். ‘டீன்ஸ்’
நாயகன் விஜய்சேதுபதி காவல்துறை அதிகாரி, வில்லன் பிரபாகர் சட்டமன்ற உறுப்பினர். இருவருக்கும் பகை. அதனால் என்ன நடக்கிறது? என்பதோடு நடுவில் விஜய்சேதுபதிக்கும் நாயகி அனுகீர்த்திவாஸுக்கும் காதல். அக்காதலில் திடீர் வில்லனாக வருகிறார் நடிகர் விமல்.அதன் முடிவு என்ன? என்பதையெல்லாம் சொல்லியிருக்கும் படம் டிஎஸ்பி. திண்டுக்கல்லில் பூக்கடை நடத்தும் இளவரசுவின் மகனாக ஜாலியாகச் சுற்றிக்
ஜல்லிக்கட்டு என்பது அது நடக்கும் ஒருநாள் நிகழ்வு மட்டும்ன்று, அது உழைக்கும் மக்களின் ஊனோடும் உயிரோடும் கலந்து அவர்களின் அன்றாட வாழ்வோடு பின்னிப்பிணைந்தது என்பதை இரத்தமும் சதையுமாகச் சொல்லியிருக்கும் படம் காரி. இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள இரண்டு கிராமங்களுக்குப் பொதுவான ஒரு கோயிலை நிர்வகிக்கும் பொறுப்புக்குப் போட்டி ஏற்படுகிறது. அதற்காக ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தி அதில்
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.இலட்சுமண் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘காரி’. சசிகுமார் கதாநாயகனாக நடிக்க, மலையாள நடிகை பார்வதி அருண் இந்தப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் அறிமுக இயக்குநர் ஹேமந்த் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளார். வில்லனாக பாலிவுட் நடிகர் ஜேடி சக்கரவர்த்தி நடிக்க, மேலும் முக்கிய வேடங்களில் ஆடுகளம் நரேன்,
சந்தானம் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 21 ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது.அதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளதாம். 2015 இல் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான இந்தியா பாகிஸ்தான் படத்தை இயக்கிய என்.ஆனந்த், சந்தானம் நடிக்கும் புதிய படத்தை இயக்கவிருக்கிறார். இயக்குநர் ஆனந்த்தின் தம்பி ஓம் இந்தப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.இந்தப்படத்துக்கு டி.இமான்
பல ஆண்டுகளாக வெற்றிகரமான நகைச்சுவை நடிகராக வலம்வந்து கொண்டிருந்த சந்தானம், கடந்த சில ஆண்டுகளாகக் கதாநாயகனாக மட்டும் நடித்துக் கொண்டிருக்கிறார். சந்தானம் இப்போது, பிரபல நிதியாளரும் விநியோகஸ்தருமான மதுரை அன்பு தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். 2015 இல் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான இந்தியா பாகிஸ்தான் படத்தை இயக்கிய என்.ஆனந்த், சந்தானம் நடிக்கும் புதிய படத்தை
வடகிழக்கு மாநிலங்களில் பல்லாண்டுகளாக மக்கள் நடமாட்டம் இல்லாத ஒரு வனப்பகுதிக்குள் மக்களைக் குடியமர்த்த அரசாங்கம் முடிவு செய்கிறது. அதற்காக அந்தப்பகுதியை ஆய்வு செய்து தடையில்லாச்சான்று கொடுக்க இராணுவத்திடம் சொல்கிறார்கள். ஆய்வுக்குச் செல்லும் குழு மர்மமான முறையில் மரணமடைகிறது. அதன்பின் ஆர்யா தலைமையிலான குழு செல்கிறது. அவர்கள் போகும்போது என்னவெல்லாம் நடக்கிறது? என்பதுதான்
2010 ஆம் ஆண்டு வெளியான வம்சம் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் அருள்நிதி. அப்படத்தில் கிராமத்து இளைஞனாக நடித்திருந்தார். அதன்பின் பல படங்களில் அவர் நடித்திருந்தாலும் அவை எல்லாமே நகரத்துப் படங்கள்தாம். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ராட்சசி இயக்குநர் கெளதம்ராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க ஒப்புக்கொண்டார். அப்படத்தில் பெரிய மீசை, கிருதாவுடன் கிராமத்து இளைஞன்
தமிழ்த் திரையுலகின் முன்னனி இசையமைப்பாளர்களில் ஒருவரான டி.இமான், பதிமூன்று ஆண்டுகளுக்குப் பின் தன் இல்வாழ்க்கைத் துணையை சட்டப்பூர்வமாகப் பிரிந்தார். டிசம்பர் 29,2021 அன்று அவர் வெளீயிட்டிருந்த அறிவிப்பில், “வாழ்க்கை நம்மை பல்வேறு பாதைகளுக்கு இட்டுச் செல்லும். அந்த வகையில் எனது மனைவி மோனிகா ரிச்சர்டும் நானும் சட்டரீதியாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டோம். இனி நாங்கள்





















