எதிர்காலத்தில் தான் என்னவாகவேண்டும்? என்பதைத் தேடிக் கண்டடைவதையே வேலையாக வைத்திருக்கும் கதாபாத்திரம் சிவகார்த்திகேயனுக்கு. அப்படிப்பட்டவர் அப்பாவின் விருப்பத்துக்கேற்ப பொறியியல் கல்லூரியில் சேர்கிறார். அங்கு நடக்கும் அலம்பல்கள் புலம்பல்கள் அடிதடிகள் ஆகியனவற்றைத் தாண்டி தன்னைக் கண்டடைந்தாரா?












