இந்திய இஸ்லாமியர்களை திரெளபதி 2 காயப்படுத்தாது – மோகன் ஜி உறுதி
இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள ’திரௌபதி 2’ திரைப்படத்தில் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாகவும், ரக்ஷனா இந்துசூடன் கதாநாயகியாகவும், நட்டி நடராஜ் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.நேதாஜி புரொடக்ஷன்ஸ் சோலா சக்ரவர்த்தி,ஜி.எம். ஃபிலிம் கார்ப்பரேஷனுடன் இணைந்து தயாரித்த இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
இந்நிலையில் படத்தின் விளம்பர நிகழ்வு சனவரி 12 அன்று சென்னையில் நடைபெற்றது.
அந்நிகழ்வில் நடிகர் ஒய்.ஜிமகேந்திரன் பேசியதாவது…..
இந்தப்படத்தில் என்னுடைய கதாபாத்திரம் சிறியது என்றாலும் கதை கேட்டபோதே வைப் நன்றாக இருந்தது.படத்தின் பாடல்களையும் ட்ரைலரையும் தற்பொழுது பார்க்கும்பொழுது மோகன் படத்தை அடுத்த லெவலுக்கு எடுத்துச் சென்றுள்ளார் எனத் தெரிகிறது. ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் என படத்தில் பணிபுரிந்த அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் வாழ்த்துகள்.இந்தக்கதை இன்னொரு ‘பாகுபலி’.இன்றைய இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய சரித்திரச் சான்றுகளோடு அற்புதமாக எடுக்கப்பட்ட படம் இது.தேசிய உணர்வோடு பாரம்பரியத்தையும் இந்தக்கதை சொல்லும்.ராமநாமி என்ற கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன்.நிறைய ஆராய்ச்சி செய்து மோகன் இந்தப்படத்தை எடுத்திருக்கிறார் படம் நிச்சயம் வெற்றி பெறும் என்றார்.
மும்பை சமஉ கேப்டன் தமிழ்ச்செல்வன் சகோதரர் மோகன் பேசியதாவது….
என் அண்ணன்தான் இந்தப்படத்தை பூஜை போட்டு ஆரம்பித்து வைத்தார்,அதன்பிறகு படத்திற்கு வந்த சின்னச்சின்ன பிரச்சனைகளை இயக்குநர் மோகன் ஜி சமாளித்து படத்தை வெற்றிகரமாக முடித்தார்.நிதின் தேசாய் ஸ்டுடியோவில் என் அண்ணனும் மோகன் ஜிக்கு பக்கபலமாக இருந்தார்.படம் வெற்றி பெற வாழ்த்துகள் என்றார்.
படத்தொகுப்பாளர் தேவராஜ் பேசியதாவது….
இந்தப்படத்தில் வாய்ப்பு கொடுத்த இயக்குநர்,தயாரிப்பாளருக்கு நன்றி.படம் நன்றாக வந்திருக்கிறது.உங்கள் அனைவரது ஆதரவும் தேவை என்றார்.
கலை இயக்குநர் கமல்….
நாங்கள் எதிர்பார்க்காத பல விசயங்களை கதையில் கொண்டு வந்து பிரம்மாண்டமாக இயக்குநர் எடுத்திருக்கிறார். படம் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள் என்றார்.
ஒளிப்பதிவாளர் பிலிப் கே சுந்தர்….
இந்த வாய்ப்பு கொடுத்த மோகன் சாருக்கும் தயாரிப்பாளருக்கும் நன்றி. பத்து வருடங்களுக்குப் பிறகு தமிழ்சினிமாவிற்கு ‘திரெளபதி2’ மூலம் வந்திருக்கிறேன். நன்றி என்றார்.
வசனகர்த்தா பத்மா சந்திரசேகர்….
கதைக்கு நாங்கள் எடுத்துக்கொண்ட காலகட்டம் கொஞ்சம் குழப்பமான காலகட்டம்.அதற்கு முன்பும் பல போர்கள் நடந்திருந்தாலும் நம் கலாச்சாரத்தின் மீது தாக்குதல் நடந்தது இந்த காலகட்டத்தில்தான்.இதில் வேலை பார்க்க வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்,இயக்குநர் மற்றும் என் வசனத்தைப் பேசிய நடிகர்கள் என அனைவருக்கும் நன்றி என்றார்.
நடன அமைப்பாளர் தணிகா டோனி….
இது என்னுடைய முதல் படம்.இந்த வாய்ப்பு கொடுத்த இயக்குநர்,தயாரிப்பாளருக்கு நன்றி.முதல்படம் என்பதால் கொஞ்சம் பயத்தோடுதான் சென்றேன்.ஆனால், இயக்குநர் மிகவும் ஆதரவு கொடுத்தார்.அனைவருக்கும் நன்றி என்றார்.
பாடலாசிரியர் செல்வ மீரா….
எம் கோனே பாடலுக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குநர்,தயாரிப்பாளருக்கு நன்றி.பாடலுக்குக் கிடைத்த அதே ஆதரவு படத்திற்கும் கிடைக்கும் என நம்புகிறேன் என்றார்.
`வீர வல்லாள மகாராஜா’ புத்தகத்தின் எழுத்தாளர் ஆறு அண்ணல் கண்டார்…..
என் கனவை மோகன் வாயிலாக பார்த்துக் கொண்டிருக்கிறேன்.மோகனைப் போன்ற தன்னம்பிக்கையான ஒருவரை நான் பார்த்தது கிடையாது.அருணாச்சல புராணம் என்ற சமஸ்கிருத நூலை எள்ளப்பநாதர் தமிழ்ப்படுத்தினார்.அதில் ஒன்றுதான் வல்லாள மகாராஜாவின் சரிதம்.அவரது ஆட்சியில் தர்மம் மேலோங்கி இருந்தது.இருந்தாலும் தனக்குப் பின்னால் நாடு என்னவாகும் என சிவபெருமானுக்கு மனக்குறை இருந்தது.இதனால் சிவனடியாராக பூமிக்கு வல்லாள மகாராஜாவிடம் வருகிறார்.சிவனடியாரின் மனக்குறையை வல்லாள மகாராஜா தீர்த்து வைக்க அவருக்கே பிள்ளையாகிறார் சிவன்.இந்தக்கதையை இன்னும் விரிவாகப் படத்தில் நீங்கள் பார்ப்பீர்கள் என்றார்.
நடிகை ஜெயந்தி மாலா….
எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர், இயக்குநருக்கு நன்றி.வெற்றி பெறப்போகும் இந்தப்படத்தில் நான் விருதாம்பாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.படத்தில் எல்லோருமே அந்தந்தக் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.படம் நிச்சயம் வெற்றி பெறும் என்றார்.
நடிகர் கணேஷ்….
மோகன் சார் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. இதுபோன்ற படம் வருவது அரிதானது.அதில் எனக்கு நல்ல கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார்கள்.நன்றி என்றார்.
நடிகர் ஆல்பர்ட்….
படத்தில் எனக்கு முக்கியமான ராஜா கதாபாத்திரம் கொடுத்த இயக்குநர் மோகன் ஜிக்கு நன்றி.படத்தில் பணிபுரிந்துள்ள நடிகர்கள், தொழில்நுட்பக்கலைஞர்களுக்கு வாழ்த்துகள்.என்னுடன் சேர்ந்து 2 மணி நேரத்துக்கும் மேலாக கஷ்டப்பட்ட மேக்கப்மேனுக்கும் நன்றி. படம் மிகப்பெரிய வெற்றி அடைய வாழ்த்துகள் என்றார்.
நடிகர் மாருதி….
இந்தப்படம் நடக்க முக்கிய காரணம் தயாரிப்பாளர் சோலா சக்கரவர்த்தி சார்தான்.இந்தக்கதையை எடுப்பது சாதாரண விசயம் கிடையாது.அதனை நம்பிக்கையோடு மோகன் ஜி எடுத்துள்ளார்.மும்பையில் பல பெரிய படங்கள் எடுத்த ஸ்டுடியோவில்தான் இந்தப்படமும் படமாக்கப்பட்டுள்ளது.சிஜி இந்தப்படத்தில் அதிகம் இருக்காது.பெரும்பாலும் லைவ் லொகேஷனில்தான் எடுத்திருக்கிறோம்.செட் வொர்க்கும் அற்புதமாக வந்துள்ளது.விஎஃப்எக்ஸ் பணியும் அற்புதம்.படத்தின் கதாநாயகன் ரிச்சர்ட் மிகக் கடுமையாக உழைத்துள்ளார்.படம் பார்க்கும்போது அது உங்களுக்குத் தெரியும் என்றார்.
நடிகர் அருணோதயன்…..
இந்தப்படத்திற்கு மோகன் ஜி கடுமையான உழைப்பைக் கொடுத்துள்ளார்.படத்தில் பணிபுரிந்த அனைவரின் உடல் மற்றும் மனதை புரொடக்ஷன்ஸ் நிறைவாக வைத்திருந்தது.என்னை ஸ்டண்ட் செய்ய வைத்த இயக்குநர்,ஸ்டண்ட் மாஸ்டருக்கு நன்றி.ரிச்சர்ட் சார் மிக எளிமையாக நடந்துகொண்டார்.படம் வெற்றி பெற வாழ்த்துகள் என்றார்.
நடிகர் தினேஷ் லம்பா….
இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் இந்தப்படம் சொந்தமானது.படம் நன்றாக வந்துள்ளது என்றார்.
நடிகர் பரணி…
வாய்ப்பு கொடுத்த இயக்குநர்,தயாரிப்பாளருக்கு நன்றி.என்னை வேறொரு ஜானரில் மோகன் ஜி காட்டியிருக்கிறார்.இந்தப்படத்தை எல்லோரும் பெரிதாக கொண்டாடுவீர்கள் என நம்புகிறேன்.மோகன் ஜியின் கடுமையான உழைப்பிற்காகவே படம் பெரிய வெற்றி பெறவேண்டும் என விரும்புகிறேன்.நன்றி என்றார்.
நடிகை திவி….
இந்தப்படத்தில் வாய்ப்பு கொடுத்த மோகன் சாருக்கு நன்றி.உடன் நடித்த அனைவருக்கும் நன்றி என்றார்.
நடிகை தேவயாணி ஷர்மா….
இந்தப்படத்தில் வாய்ப்பு கொடுத்த மோகன் சாருக்கு நன்றி.நான் மும்பையில் இருந்து வருகிறேன்.படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் வாழ்த்துகள்.படத்தை தியேட்டரில் பாருங்கள் என்றார்.
இயக்குநர் சரவண சுப்பையா….
மோகன் ஜியுடன் நான் ஏற்கனவே வேலை பார்த்திருக்கிறேன்.கடுமையான உழைப்பாளி.இசையமைப்பாளர் ஜிப்ரானும் எனர்ஜிடிக்கான இசையை கொடுத்துள்ளார்.உங்களை மிரள வைக்கும் பல காட்சிகள் படத்தில் உள்ளது.எல்லோரும் கடுமையாக இந்தப்படத்திற்காக உழைத்துள்ளனர்.வாழ்த்துகள் என்றார்.
நடிகர் சிராக் ஜானி…..
தமிழ் கலாச்சாரத்துடன் இந்தப்படம் தொடர்புடையது.உங்கள் அனைவரின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி.வாய்ப்பு கொடுத்த இயக்குநர் மோகன் ஜிக்கு நன்றி.யாருக்கும் அதிகம் தெரியாத வீர வல்லாள மகாராஜா பற்றி மோகன் படமாக எடுத்துள்ளார்.தமிழ்நாடு என்பது பண்பாடு,அடையாளம்,மண்ணுடைய வீரம்,வரலாறு,அன்பு இதெல்லாம் உள்ளடக்கியது.இதுபோன்ற கதை மீது நம்பிக்கை வைத்து தேர்ந்தெடுத்த தயாரிப்பாளருக்கு நன்றி.என்னுடைய கதாபாத்திரம் மிகவும் வலிமையானது.துக்ளக் கதாபாத்திரத்தை மிகவும் சின்சியராக நடித்திருக்கிறேன்.ரிச்சர்ட் சாருக்கு நன்றி.தொழில்நுட்பக் கலைஞர்களும் சிறப்பாக பணிபுரிந்துள்ளனர்.நல்லகதைகளுக்கு இரசிகர்கள் எப்போதும் வரவேற்பு கொடுப்பீர்கள் என நம்பிக்கை உள்ளது என்றார்.
இயக்குநர் முத்தையா….
’திரெளபதி2’ மோகனின் ஐந்தாவது படம். தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் இது முக்கியமான படம்.பெரும் வெற்றி பெற்று அனைவருக்கும் பிடித்தமான படமாக வர வாழ்த்துகள்.நன்றி என்றார்.
நடிகர் வேல ராமமூர்த்தி….
மோகன் ஜி சினிமா துறைக்கு வந்ததில் இருந்து அவரது படங்களில் எப்போது நடிப்போம் என்ற தீ எனக்குள் இருந்தது. ‘ருத்ரதாண்டவம்’ படத்தில் வாய்ப்பு வந்தது.ஆனால்,அது கொரோனா நேரம் என்பதால் நடிக்கமுடியாமல் போனது.நான் சினிமாவுக்கு வந்து இத்தனை ஆண்டுகளில் நடித்திருக்கும் முதல் சரித்திரப்படம் இது.துணிச்சலாக சரித்திர வரலாற்றுப் படத்தை மோகன் ஜி எடுத்துள்ளார்.பல எதிர்ப்புகள் வந்தபோதிலும் அதை எல்லாம் தைரியமாக எதிர்கொண்டு இந்தப்படத்தை முடித்துள்ளார்.தொழில்நுட்பக் கலைஞர்களும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளனர்.இந்தவருடத்தின் முக்கியமான படத்தில் சிறப்பான இசையை ஜிப்ரான் கொடுத்துள்ளார். இது ‘திரெளபதி’ பொங்கல்.திருவண்ணாமலையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வீர வல்லாள தேவராயரின் சரித்திரக் கதை இது.‘திரெளபதி2’ மிகப்பெரும் வெற்றி பெற வாழ்த்துகள் என்றார்.
நடிகர் நட்டி….
இந்தப்படத்தில் வாய்ப்பு கொடுத்த இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் நன்றி.இந்தக்கதை மூலமாக வரலாற்றைத் தெரிந்து கொண்டேன்.படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் கடினஉழைப்பைக் கொடுத்துள்ளனர்.குறைந்த நாட்களில் இந்தப்படத்தை முடிப்பது சாதாரண விசயம் கிடையாது.ஜிப்ரான் இசையில் எம் கோனே பாடல் அருமை.படத்திற்காக பிரம்மாண்டமாக செலவழித்திருக்கிறார் தயாரிப்பாளர்.இந்தப்படத்திற்காக ரிச்சர்ட் கொடுத்த உழைப்பு மிகப்பெரியது.படத்தின் வில்லன்கள் எல்லோரும் நேரில் பார்க்க ஹீரோ மாதிரி உள்ளார்கள்.ஹீரோயின்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.நன்றி என்றார்.
இசையமைப்பாளர் ஜிப்ரான்…..
ஒரு படத்தின் இயக்குநருடன் பயணம் செய்யும் அந்தநேரம் பயனுள்ளதாக சந்தோசமாக இருக்கவேண்டும் என்று நினைப்பேன்.அது மோகன் ஜியுடன் நன்றாக செட் ஆனது.அவருக்குள் ஒரு குழந்தை உள்ளது.தெளிவும் நம்பிக்கையும் அவரிடம் நிறைய உள்ளது.இந்தப்படத்தில் எனக்கு நிறைய புதுஅனுபவங்கள் கிடைத்தது. எம் கோனே போன்ற ஒரு மெலோடி பாடலை ஓகே செய்ததற்கு நன்றி.’திரெளபதி’ என்பதற்கு பின்னால் நிறைய சர்ச்சைகளும் இருந்தது.ஆனால்,அதை எல்லாம் தாண்டி அவசியம் சொல்லப்பட வேண்டிய இந்த வரலாற்றை எடுக்க முன்வந்த தயாரிப்பாளருக்கு நன்றி என்றார்.
நடிகை ரக்ஷனா இந்துசூடன்….
நெருப்பில் இருந்து பிறந்தவள் திரெளபதி.அந்தப்பெயரை ‘திரெளபதி2’ படத்தில் எனக்குக் கொடுத்த இயக்குநர் மோகன் சாருக்கு நன்றி. இந்தக்கதை 14 ஆம் நூற்றாண்டில் நடந்தது.என்னை நம்பிய மோகன் சாருக்கு நன்றி.இந்தக் கதாபாத்திரத்திற்குள் வருவதும் வந்த பின்பு அதைவிட்டு வெளியே போவதும் எனக்குக் கடினமான ஒன்றாகதான் இருந்தது.நீங்கள் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்.தயாரிப்பாளர் சோலா சக்ரவர்த்தி சாருக்கும் ரிச்சர்ட் ரிஷி சாருக்கும் நன்றி.படக்குழுவினர் அனைவரும் சிறப்பாக உழைத்துள்ளனர்.இந்த கதாபாத்திரத்திற்காக எடை கூடியுள்ளேன்.இயக்குநருடைய தெளிவான திட்டமிடல் மூலம்தான் படத்தை இவ்வளவு குறைந்த நாட்களுக்குள் முடிக்க முடிந்தது.பல தடைகளைத் தாண்டி பொங்கலுக்கு தமிழ் வரலாற்றை பற்றிய படமாக ‘திரெளபதி2’ திரையரங்குகளில் வரவிருக்கிறது.உங்கள் அனைவருடைய ஆதரவும் தேவை என்றார்.
நடிகர் ரிச்சர்ட் ரிஷி……
இந்தப்படத்திற்கு சிறப்பான உழைப்பை நாங்கள் கொடுத்துள்ளோம்.கதையை நம்பிய தயாரிப்பாளருக்கும் கடினஉழைப்பு கொடுத்த மோகனுக்கும் நன்றி.படம் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள் என்றார்.
தயாரிப்பாளர் சோலா சக்ரவர்த்தி…..
பல வருடங்களாக படம் எடுக்கலாம் என்ற யோசனையில் இருந்தபோது சரியான கதையோடு மோகன் சார் வந்தார்.31 நாட்களில் படத்தை முடித்துள்ளார் இயக்குநர் மோகன். காலை 9 மணிக்கு ஆரம்பித்து இரவு வரை படப்பிடிப்பு நடக்கும்.எங்களுக்கு ஆதரவு கொடுத்த ஊடகங்களுக்கும் நன்றி என்றார்.
இயக்குநர் மோகன் ஜி….
பீரியட்படம் இது என்பதால் முதல்படம் போலவே சின்சியராக வேலை பார்த்தேன்.அதற்கு பெரும்பலமாக இருந்த தொழில்நுட்பக்குழுவினருக்கு மிகப்பெரிய நன்றி.அவர்கள் இல்லாமல் இந்த பட்ஜெட்டில் 31 நாட்களுக்குள் படம் எடுப்பது சாத்தியமே இல்லை.ரிச்சர்ட் சார் இல்லாமல்‘திரெளபதி2’இல்லை.இந்தப்படத்திற்காக இன்னும் ஒருரூபாய் சம்பளம் கூட அவர் வாங்கவில்லை. குதிரைப்பயிற்சி,கத்திச்சண்டை என ஒரு வருடமாக இந்தப்படத்திற்காக ஒருநாளில் 16 மணி நேரம் உழைத்துள்ளார்.நான் சொன்ன பட்ஜெட்டை விட கொஞ்சம் அதிகமாய் போயிருந்தாலும் கதை மீது நம்பிக்கை வைத்து ஆதரவு கொடுத்த தயாரிப்பாளர் சோலா சக்ரவர்த்தி சாருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நன்றி.படத்தின் முக்கியமான நபர் ஒளிப்பதிவாளர் சுந்தர்.நான் எதிர்பார்த்ததை போலவே சிறப்பான தரமான பணியைக் கொடுத்துள்ளார்.அவருக்கு இணையான உழைப்பை கலை இயக்குநர் கொடுத்துள்ளார்.இந்தப்படம் பெரிய வெற்றி பெற்றால் பலருக்கும் உந்துதலாக இருக்கும்.
25 ஹீரோயின்களை பார்த்தபிறகு ரக்ஷனாவை தேர்ந்தெடுத்தேன்.மிகவும் தைரியமானவர்.திறமையான நடிப்பை கொடுத்துள்ளார். அவருக்கு நல்ல எதிர்காலம் உண்டு.பரணி அண்ணனுடன் முதல்படத்திலேயே வேலை செய்யவேண்டியது.ஐந்தாவது படத்தில்தான் அது கைகூடியுள்ளது.அவர் பேசும் வசனம் படத்தில் முக்கியமானது.சிராக் ஜானி சார்,தினேஷ் லம்பா சார் இரண்டு பேரும் மும்பையை சேர்ந்தவர்கள்.இரண்டு பேரின் நடிப்பும் நிச்சயம் பேசப்படும்.மற்ற இரண்டு ஹீரோயின்களுக்கும் தமிழ் தெரியாது என்றாலும் புரிந்துகொண்டு நடித்துள்ளனர்.நட்டி அண்ணனுக்கு சிறப்பான உடல்மொழி உள்ளது.அவருடைய கரியரில் இந்த கதாபாத்திரம் நிச்சயம் மணிமகுடமாக இருக்கும்.வேல ராமமூர்த்தி சாரின் நடிப்பும் குரலும் சிங்கம் கர்ஜிப்பதுபோல இருக்கும்.தென்மாவட்டத்தைச் சார்ந்த நல்லகதை அவரிடம் இருந்து எனக்கு வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன்.
எழுத்தாளர் பத்மாவை பெண் சாண்டில்யன் என சொல்வார்கள்.நிறைய புது தமிழ்வார்த்தைகளை இந்தத் தலைமுறைக்கு அறிமுகம் செய்திருக்கிறார்.அருமையான பல கதைகள் வைத்திருக்கிறார்.தமிழ்சினிமாவில் நல்ல எதிர்காலம் அவருக்கு உண்டு.அரியலூர் சிமெண்ட் தொழிற்சாலையால் மக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பது பற்றிய ஒரு கதை எடுப்பதுதான் முதலில் எங்கள் திட்டம். அந்தசமயத்தில் காசி சென்றிருந்தேன்.நான் சிவபக்தர்.அங்கு ஒரு கோயிலுக்குச் சென்றபோது அங்கிருந்த நந்தி,நம் இஸ்லாமிய மக்கள் வழிபடும் ஞானவாபி மசூதியை பார்த்தார்போல இருந்தது.அதைப்பற்றி விசாரித்தபோது ஒளரெங்கசீப் அங்கிருந்த கோயிலை நோக்கி மசூதி உருவாக்கிய வரலாறு தெரியவந்தது.அது தமிழ்நாட்டுடனும் கனெக்ட் ஆகிறது.அதைப்பற்றி விரிவாகப் படித்தவுடன் இதுதான் நான் பண்ண வேண்டிய படம் என முடிவுசெய்தேன்.’சாவா’ படம் பார்த்தபிறகு என் நம்பிக்கை இன்னும் அதிகமானது.ஜிப்ரான் சார் இந்தப்படத்திற்குள் வந்ததும் இந்தப்படம் இன்னும் பெரியதானது.எம் கோனே பாடல் இப்போது பத்மலதா மேடம் குரலில்தான் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.அவருக்கு நன்றி.பல இடங்களில் அவரது இசை உணர்வுப்பூர்வமாக உள்ளது.
நம்முடன் சகோதரர்களாக வாழ்ந்து வரும் இந்திய இஸ்லாமியர்களை இந்தப்படம் எந்தவகையிலும் காயப்படுத்தவில்லை.அவர்களின் தொடக்கம் எது என்று இந்தப்படம் புரியவைக்கும்.மற்றபடி கமர்ஷியலான படம்தான் இது.வீரபாண்டிய கட்டபொம்பன்,சிறை, மதரசாப்பட்டிணம் போன்ற படங்களில் பிரிட்டிஷ்காரர்களை காட்டும்போது மத,அடையாளங்கள் இல்லாமல் அவர்களை பிரிட்டிஷ்காரர்களாக மட்டுமே எப்படி ஏற்றுக்கொண்டீர்களோ அதேபோல இந்தப்படத்தை துருக்கியில் இருந்து நம் நாட்டைக் கைப்பற்ற வந்த அந்நியர்களாக எண்ணித்தான் கதையை நான் எழுதியுள்ளேன்.அவர்களின் வாழ்க்கையை மத அடையாளங்களோடு தொடர்புபடுத்தி பார்க்காதீர்கள்.இந்தநாட்டை அடிமைப்படுத்த துருக்கியில் இருந்து படை எடுத்து வந்தவர்கள் பற்றிய கதை.மூன்று வில்லன்கள் படத்தில் உள்ளனர்.ஐந்து மொழிகளில் இந்தப்படம் உருவாகியுள்ளது.நல்லபடியாக பொங்கலுக்கு படம் வெளியாகிறது.என்னை நம்பிய தயாரிப்பாளர்களுக்கு இதுவரை நட்டம் வந்ததில்லை.வீர வல்லாள மகாராஜா வரலாற்றை வெளியே கொண்டு வருவது எனக்கு பெருமை.உங்கள் அனைவரையும் ‘திரெளபதி2’ திருப்திப்படுத்தும்
இவ்வாறு அவர் பேசினார்.











