செய்திக் குறிப்புகள்

வரலாறு முக்கியம் ஜாலியான படம் – நடிகர் ஜீவா உறுதி

சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில், நடிகர் ஜீவா நடிப்பில் இயக்குநர் சந்தோஷ்ராஜன் இயக்கியுள்ள திரைப்படம் “வரலாறு முக்கியம் “. ரொமான்ஸ் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இப்படம் டிசம்பர் 9 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் படக்குழுவினர் கலந்துகொள்ள நவம்பர் 2 ஆம் தேதி நடைபெற்றது. 

இந்நிகழ்வினில், நடிகர் டி எஸ் கே பேசியதாவது…,

சூப்பர் குட் பிலிம்ஸில் நான் நடித்தது எனக்குப் பெருமையான விசயம். இயக்குநர் சந்தோஷ்ராஜன் போன்ற ஒரு கூலான மனிதரைப் பார்க்க முடியாது, மொத்தக் குழுவையும், நடிகர்களையும் சரியாக வழிநடத்திப் படத்தை உருவாக்கியுள்ளார். படம் பார்த்துவிட்டு உங்கள் ஆதரவைத் தாருங்கள் என்றார்.

நடிகர் ஷாரா பேசியதாவது…,

இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பளித்த ஜீவா சார், சூப்பர் குட் பிலிம்ஸ்,இயக்குநர் சந்தோஷ் ஆகிய மூவருக்கும் நன்றி. ஒளிப்பதிவாளர் சக்தி, காமெடி சீனை கொரியோகிராப் செய்வார், அது பலரிடத்தில் இருப்பது இல்லை.எஸ்எம்எஸ் போன்று இதுவும் ஒரு ஜாலியானா படமாக இருக்கும். இந்தப் படம் கண்டிப்பாக வெற்றியடையும் என்றார்.

நடிகை பிரக்யா நாக்ரா பேசியதாவது….. 

இது என்னுடைய முதல் படம். அதற்கு இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் எனது நன்றிகள். நான் முதன் முதலில் பார்த்த தமிழ்ப் படம் சிவா மனசுல சக்தி படம் தான். ஜீவா போன்ற சிறந்த நடிகருடன் நடித்தது எனக்கு மகிழ்ச்சி.இது எனது கனவு நிஜமான தருணம். முதல் படத்திலயே மிகப்பெரிய நட்சத்திரங்களுடன் நடித்தது எனக்கு மிகப்பெரிய விசயம். இந்தப் படம் முழுக்க முழுக்க ஒரு பொழுதுபோக்குத் திரைப்படம். இந்தப் படத்திற்கு உங்களது ஆதரவு தேவை. நன்றி என்றார்.
 
இயக்குநர் சந்தோஷ் ராஜன் பேசியதாவது…… 

இந்தப்படத்தில் கலகலப்பான ஜீவாவை மீண்டும் பார்க்கலாம். சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் படம் செய்வது எனது கனவு அது நிறைவேறியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. பிரக்யா குஜராத்திப் பெண் ஆனால் அவர் ஒரு மலையாளி என அனைவரையும் நம்ப வைத்து விட்டார். அந்தளவு கதாப்பாத்திரத்தில் ஒன்றி நடித்தார். காஷ்மீரா அற்புதமாக நடித்துள்ளார். இந்தப்படம் மிக ஜாலியான படமாக இருக்கும். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும் என்றார்.
 
நடிகர் ஜீவா பேசியதாவது…,

எஸ்எம்எஸ் படத்திற்குப் பிறகு அது போன்று ஒரு படம் வேண்டும் என்று அனைவரும் என்னைக் கேட்டார்கள். அப்படி ஒரு படமாகத்தான் இந்த வரலாறு முக்கியம் வந்துள்ளது. இந்தப் படத்தின் இயக்குநர் மிகவும் அதிகமான காமெடி உணர்வு உள்ளவர். அது படத்திலும் பிரதிபலித்துள்ளது. கோவிட் காலகட்டத்தில் தான் இந்தப் படத்தை உருவாக்கினோம். மக்கள் சந்தோசமாகப் படம் பார்க்க வேண்டுமென இப்படத்தை உருவாக்கியுள்ளோம். ஹீரோயின் பிரக்யா மற்றும் காஷ்மீரா இருவருடன் பணியாற்றியது மகிழ்ச்சியைத் தருகிறது. காஷ்மீரா இதில் மலையாளம் கலந்த தமிழ் பேசி அசத்தியுள்ளார். பிரக்யாவை முன்னதாகவே சோஷியல் மீடியா மூலம் தெரியும். அவருடன்  பகிர்ந்துகொண்டதும், படப்பிடிப்புத் தளத்திலும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. அனைவரது கூட்டு முயற்சியிலும் இந்தப் படம் உருவாகி உள்ளது. உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி. 

இவ்வாறு அவர் பேசினார்.

Related Posts