காவல்துறை அதிகாரியின் மகள் காணாமல் போகிறார்.அதேநேரம் ஒரு கொலை செய்ததாகச் சொல்லி ஓர் இளைஞர் சரணடைகிறார்.அதைப் பற்றி விசாரித்தால் அவர் கொலை செய்ததாகச் சொன்னவர்கள் உயிருடன் இருக்கிறார்கள்.அப்படியானால் அந்த இளைஞன் ஏன் பொய் சொல்லவேண்டும்? என்கிற கேள்விக்கான விடையாக குற்றம் புதிது படம் இருக்கிறது.
நோவா ஆம்ஸ்ட்ராங் எழுதி இயக்கி இருக்கும் படம் குற்றம் புதிது. இந்தப் படத்தில் தருண் விஜய் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக சேஷ்விதா கனிமொழி நடிக்கிறார். இவர்களுடன் மது சூதனராவ், நிழல்கள் ரவி, இராமச்சந்திரன் துரை, பாய்ஸ் ராஜன், பிரியதர்ஷினி ராஜகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தை ஜிகேஆர் சினி ஆர்ட்ஸ்
அறிமுக இயக்குநர் நோஹா ஆம்ஸ்ட்ராங் இயக்கத்தில், புதுமுக நாயகன் தருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் குற்றம் புதிது. இப்படத்தில் நாயகியாக ’பரமசிவன் பார்வதி’, ‘மார்கன்’ ஆகிய படங்களில் நடித்திருக்கும் சேஷ்விதா கனிமொழி நடித்திருக்கிறார். இவர்களுடன் மதுசூதன் ராவ், நிழல்கள் ரவி, இராமச்சந்திரன் துரைராஜ், பாய்ஸ் இராஜன், பிரியதர்ஷினி இராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில்














