சிம்புவின் திரையுலகப் பயணத்தில் அண்மைக்காலமாகப் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக அவர் நடித்த படங்கள் பெரிதாகப் போகவில்லை. நடிக்க ஒப்பந்தமான படங்களும் நடக்கவில்லை. இப்போது கன்னட மொழிமாற்றுப் படமொன்றில் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து நடித்துக்கொண்டிருக்கிறார். அப்படத்தின்
சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் தொடங்குவதாகச் சொல்லப்பட்ட படம் மாநாடு. இப்போது தொடங்குவோம் அப்போது தொடங்குவோம் என்று பல மாதங்களாகச் சொல்லிக்கொண்டிருந்துவிட்டு கடைசியில் அப்படம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதோடு வெங்கட்பிரபு இயக்கத்தில் வேறு கதாநாயகனை வைத்து அப்படத்தை எடுக்கப் போவதாகவும் சொன்னார்கள். இதனால் சிம்பு கடும் கோபமாகிவிட்டார் போலும். அதனால் இன்று













