நடிகர் யோகிபாபு நடித்த ‘கெணத்த காணோம்’ திரைப்படம், சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி, வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. ஆர்.பி. டாக்கீஸ் சார்பில் ரமேஷ்பாபு தயாரித்துள்ள இந்தப்படத்தை, ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தின் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ளார்.
குடிநீர்ப் பஞ்சத்தில் தவிக்கும் இராமநாதபுரம் மாவட்ட கிராமமொன்றில் குடிநீர்ச் சிக்கலைத் தீர்க்க கிணறு வெட்டப்படுகிறது.அந்தக் கிணற்றில் பூதத்துக்குப் பதிலாக பழங்கால உயிரினமான டைனோசர் எலும்புக்கூடு கிடைக்கிறது.அதுவரை யாரும் அறியாமலிருந்த அந்த கிராமம் நாடெங்கும் அறியப்படுகிறது.அதனால் அங்கு வசிக்கும் மக்கள் பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாகிறார்கள்.அவை என்னென்ன? அவற்றிற்கான













