ஏழு மலை ஏழு கடல் தாண்டி ஒரு புதையல் அதைப் பாதுகாக்கும் ஒரு பூதம் எனும் பாட்டி சொல்லும் கதையின் இன்னொரு வடிவம் தான் கஜானா. இதில் புதையலுக்குப் பதில் நவரத்தின கற்கள் அவற்றைப் பாதுகாக்கும் யாளி என்று கதை சொல்லியிருக்கிறாரகள். இனிகோ பிரபாகர் தலைமையில் ஒரு குழு, வேதிகா தலைமையில் இன்னொரு குழு.












