எதிரெதிர் துருவங்களாக இருக்கும் நாயகன் நாயகிக்கிடையே காதல் வந்தால் எப்படி இருக்கும்? என்கிற கேள்விக்கும்,மதுக் குடிப்பகம் வைக்கப் பாடுபடும் நாயகன், மதுவுக்கு எதிராகப் போராடும் நாயகி என்று மதுவை மையப்படுத்திய மையக்கதையின் இறுதியில் என்ன நடக்கிறது? என்கிற கேள்விக்கும் விடையாக வந்திருக்கிறது சாலா
திரைப்பட விநியோகஸ்தரும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவருமான திருப்பூர் சுப்பிரமணியம் மற்றும் சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரி ஆகிய இருவரின் முயற்சியில் புதிய படமொன்று தயாரிக்கப்படவிருக்கிறது. அந்தப்படத்தை இயக்குபவர் கே.எஸ்.ரவிக்குமார். நாயகன் சத்யராஜ்.கதையில் முக்கியமான சிறப்புத் தோற்றத்தில் விஜய்சேதுபதி நடிக்கிறார். பார்த்திபன் ஒரு முக்கிய வேடத்தில்















