சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல் என்கிற திருக்குறளுக்குப் புதுவிதமாக உரை எழுதியிருக்கிறது காலேஜ்குமார் படம். அதிகம் படிக்காத காரணத்தால் உடன்படித்த தணிக்கையாள நண்பரின் அலுவலகத்தில் கடைநிலை ஊழியராகப் பணியாற்றுகிறார் பிரபு. ஒருநாள் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது.












