கட்டிடப் பொறியாளர் நாயகி சாக்ஷிஅகர்வாலுக்கும் ஒரு நிறுவனத்தில் உயர் பொறுப்பில் இருக்கும் விஜய் விஷ்வாவுக்கும் திருமணம் நிச்சயமாகிறது.அதேநேரம் சாக்ஷி அகர்வாலை கல்யாணம் செய்தே ஆகவேண்டும் என்கிற கட்டாயத்தில் இருக்கிறார் கட்டுமான தொழிலாளி செல்லக்குட்டி.அது ஏன்? அதனால் என்னென்ன விளைவுகள்
தொண்ணூறுகளில் நடக்கும் முக்கோணக்காதல் கதை. அதற்குக் காரணம் தகவல் தொடர்பு வசதிகள் இப்போது இல்லாததால் நடக்கும் நிகழ்வுகளில் தாம் திரைக்கதையின் பலம் அடங்கியிருக்கிறது என்பதுதான். நாயகர்களாக டிட்டோ மற்றும் மகேஷ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.அவர்களின் நிறம், தோற்றம் ஆகியனவற்றிற்கும் திரைக்கதையில் இடம் இருக்கிறது. டிட்டோவின் கதாபாத்திரமும் நடிப்பும் நேர்மறையின் உச்சமாக அமைந்து













