Home Posts tagged sundar c (Page 3)
Uncategorized விமர்சனம்

பட்டாம்பூச்சி – திரைப்பட விமர்சனம்

பட்டாம்பூச்சி என்கிற பெயரைப் பார்த்ததும் சுந்தர்.சியின் நகைச்சுவை கலந்து ஓர் அழகான காதல் கதையாக இருக்கும் என்று எதிர்பார்த்தால் ஏமாந்து போவீர்கள். அப்பாவால் ஒதுக்கப்பட்ட ஓர் இளைஞனின் மனப்பிறழ்வால் அதிரவைக்கும் இரத்தத் தெறிப்புகளுடன் தொடக்கம் முதல் இறுதிவரை படபடப்புடனே வைத்திருக்கிறார்கள்.
செய்திக் குறிப்புகள்

மூன்று நாயகர்கள் நான்கு நாயகிகள் – சுந்தர்.சியின் அடுத்தபட விவரங்கள்

அரண்மனை-3 படத்திற்குப் பிறகு தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி வரும் படம் காபி வித் காதல். குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் ஆகிய மூன்று கதாநாயகர்கள் நடிக்க மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும்
சினிமா செய்திகள்

எஸ்.பி.பி ஜேசுதாஸ் கூட்டணி வாய்ப்பை இழந்தேன் – அரண்மனை 3 இசை குறித்து சி.சத்யா நேர்காணல்

இசையமைப்பாளர் சி.சத்யாவின் இருபத்தைந்தாவது படமாக அமைந்துள்ளது அரண்மனை 3. அப்படத்தின் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது, படம் வெளியான பின்பு பின்னணி இசைக்கும் பெரிய வரவேற்பு கிடைத்துவருகிறது. இந்நிலையில் அவருடன் ஓர் உரையாடல்….  1. அரண்மனை 3 உங்களுக்கு 25 ஆவது படம். அது அமைந்தது மற்றும் பணியாற்றிய அனுபவங்கள் பற்றிச் சொல்லுங்களேன்… 2011 இல் எங்கேயும்
விமர்சனம்

அரண்மனை 3 – திரைப்பட விமர்சனம்

ஒரு பிரமாண்ட அரண்மனை. அதற்குள் இருபது வருடங்களுக்கும் மேலாக ஓர் ஆவி சுற்றிக்கொண்டிருக்கிறது. அதனால் நாயகி ராஷிகண்ணாவுக்கும் இன்னொரு நாயகியாக இருக்கும் சாக்‌ஷிஅகர்வால் குழந்தைக்கும் சிக்கல். எதனால் அப்படி? என்பதையும் அதற்குத் தீர்வு கண்டார்களா? என்பதையும் திகிலும் நகைச்சுவையும் கலந்து சொல்லியிருக்கும் படம் அரண்மனை 3. அரண்மனைக்கு மின்சாரக்கட்டமைப்பு வேலை செய்ய வரும்
செய்திக் குறிப்புகள்

ஒரு மாதிரியெல்லாம் ஒரே மாதிரியல்ல – சுந்தர் சி சொன்ன சுவாரசிய கதை

சுந்தர்.சி இயக்கிய அரண்மனை மற்றும் அரண்மனை 2 ஆகிய பேய்ப் படங்கள் நகைச்சுவையோடு குடும்பங்களும்,குழந்தைகளும் கொண்டாடும் வகையில் வெளியாகி வெற்றி பெற்ற படங்கள். அரண்மனை முதல் மற்றும் இரண்டாம் பாகங்களின் வெற்றிக்குப் பிறகு தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா, ராஷிக்கண்ணா நடிப்பில் அரண்மனை 3 திரைப்படம் உருவாக்கப்பட்டு வெளியீட்டுக்குத் தயாராகி உள்ளது. அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம்
சினிமா செய்திகள்

அரண்மனை 3 படம் எப்படி? – ரிலீஸுக்கு முன் பார்த்தோர் கருத்து

சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த ‘அரண்மனை’ வரிசைப் படங்களின், முதல் இரண்டு பாகங்கள் பெரிய வெற்றி பெற்றன.அதன் தொடர்ச்சியாக இப்போது ‘அரண்மனை3’ உருவாகியிருக்கிறது. இப்படத்தில், ஆர்யா,ராஷிகன்னா,சுந்தர்.சி, ஆண்டிரியா,விவேக்,யோகி பாபு,சாக்‌ஷி அகர்வால், சம்பத்,மனோபாலா,வின்சன்ட் அசோகன்,மதுசூதன் ராவ்,வேல ராமமூர்த்தி,நளினி,விச்சு விஸ்வநாத், கோலபள்ளி லீலா உட்பட
சினிமா செய்திகள்

அரண்மனை 3 படத்துக்கு சுந்தர்.சி சொன்ன விலை – தாமதமாகும் வெளியீடு

அரண்மனை, அரண்மனை 2 ஆகிய படங்களைத் தொடர்ந்து அரண்மனை 3 ஆம் பாகத்தை உருவாக்கியிருக்கிறார் சுந்தர்.சி. இதில் கதாநாயகனாக ஆர்யா நடித்திருக்கிறார், ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்‌ஷிஅகர்வால் ஆகிய நாயகிகளும் விவேக், யோகிபாபு ஆகியோரும் நடித்துள்ளனர். கொரோனா சிக்கலுக்கு முன்பு அதாவது 2020 பிப்ரவரியில் தொடங்கிய இந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. கொரோனா சிக்கலில் படப்பிடிப்பு
சினிமா செய்திகள்

விஷாலை வற்புறுத்தும் சுந்தர்.சி – எதற்காகத் தெரியுமா?

2021 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்காக இப்போதே அனைத்துக் கட்சிகளும் தங்களை வலுப்படுத்திக் கொள்ளும் பணியில் இறங்கியுள்ளனர். இதில் முதலாவதாக பாஜகவில் பல்வேறு தமிழ்த் திரையுலகினர் இணைந்துள்ளனர். அவர்கள் அனைவருக்குமே பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் நடிகர் விஷாலும் பாஜக கட்சியில் இணையவுள்ளார் என்று சொல்லப்பட்டது.செப்டம்பர் 13 அன்று காலை பாஜக
சினிமா செய்திகள்

சுந்தர்.சி படம் தீபாவளி வெளியீடு – அதிரடி முடிவு

சுந்தர்.சி இப்போது ஆர்யா நடிக்கும் அரண்மனை 3 படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.அதோடு அவர் தயாரிப்பில் இன்னொரு படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. பிப்ரவரி 28 ஆம் தேதி கன்னடத்தில் வெளியான படம் மாயாபஜார் 2016. ராஜ் பி.ஷெட்டி, வசிஸ்டா சிம்ஹா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்த அந்தப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது. 2016 ஆம் ஆண்டு நடந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மையமாக வைத்து
சினிமா செய்திகள்

தமிழக அரசு அனுமதிக்காவிட்டால் என்ன? – படப்பிடிப்பு தொடங்க சுந்தர்.சி அதிரடி திட்டம்

அரண்மனை, அரண்மனை 2 ஆகிய படங்களைத் தொடர்ந்து அரண்மனை 3 ஆம் பாகத்தைத் தொடங்கியிருக்கிறார் சுந்தர்.சி. இதில் கதாநாயகனாக ஆர்யா நடிக்கிறார், கதாநாயகி கதாபாத்திரத்துக்கு ராஷி கண்ணா தேர்வாகியுள்ளாராம். விவேக், யோகிபாபு ஆகியோரும் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. குஜராத்தில் ஒரு அரண்மனை புதிதாகவும் பிரமாண்டமாகவும் இருக்கிறதென்று, அங்கே