சினிமா செய்திகள்

டி.ராஜேந்தருக்கு தகுதி இல்லை – ராதாகிருஷ்ணன் சொல்லும் 2 காரணங்கள

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க நவம்பர் 22 ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது.

இத்தேர்தலில், தேனாண்டாள் முரளி தலைமையில் தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணி, டி.ராஜேந்தர் தலைமையில் தயாரிப்பாளர்கள் பாதுகாப்பு அணி ஆகியன போட்டியிடுகின்றன.

இவ்விரண்டு அணிகளைத் தவிர சுயேச்சையாக தலைவர் பதவிக்கு தேனப்பன், செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு ஓயாத அலைகள் அணி, முன்னேற்ற அணி என நான்கு அணிகள் போட்டியிட்டாலும் தேர்தல் களத்தில்” தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணிக்கும்-தயாரிப்பாளர்கள் பாதுகாப்பு அணிக்கும் இடையில் மட்டுமே போட்டி என்கிற சூழல் நிலவி வருகிறது

ஒரு வார காலமே இருக்கும் நிலையில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது

அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த டி.ராஜேந்தர், செய்தியாளர்கள் கேள்விகளுக்குப் பொறுப்பாக பதில்கூறுவதைத் தவிர்த்து வழக்கமான எதுகை மோனை வார்த்தை ஜாலங்களை கையாண்டார்

விபிஎஎப்க்கு எதிராக முதல் குரல் கொடுத்தது நான் தான் தமிழ் சினிமா நன்மைக்காக பிரதமர் மோடி கார் முன்னே குதிப்பேன் என்றெல்லாம் கூறியிருந்தார்.

இது சம்பந்தமாக,முரளி அணியில் கெளரவ செயலாளர் பதவிக்குப் போட்டியிடும் ராதாகிருஷ்ணனிடம் ஒரு பேட்டி.

கேள்வி ; டி.ராஜேந்தர் தயாரிப்பாளர்கள் நலனுக்காக பிரதமர் காரின் முன்னால்கூட விழுவேன் எனபத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளாரே.

பதில்; நானும் அந்த 45 நிமிட பேட்டியைப் பார்த்தேன் அதில் தயாரிப்பாளர்கள் நலன், பிரச்சினை பற்றி எதுவுமே பேசவில்ல சங்கத்தலைவர் பதவிக்கு வேறு சங்கங்களில் தலைமைப் பொறுப்பில் இல்லாதவர்கள் போட்டியிடக் கூடாது என்கிற சங்க வீதியைப் பின்பற்றாதவர்
மீடியாவை சந்திக்கிறபோது பொதுக்கூட்டமேடையில் பேசுவதுபோல் பேசுகிறார் அவர் பேசிமுடிக்கும்போது என்ன சொன்னார் என்று யாருக்கும் புரியவில்லை

எதுகை மோனை பேச்சு சினிமாவுக்கு பயன்படும் சங்கப்பணிகளுக்குப் பயன்படாது என்பதை டி.ஆர்புரிந்துகொள்ள வேண்டும். டிக்கட் கட்டணத்தைப் பற்றிப்பேசுகிறபோது அவர் யாருக்காகப் பேசுகிறார் என்பதைத் தெளிவுபடுத்தவேண்டும்
விநியோகஸ்தர்களுக்கா, தயாரிப்பாளர்களுக்காகவா? பொதுமக்கள் நலன் பற்றிப்பேசுகிறவர் அரசியல் கட்சிக்குப் போகவேண்டும் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் மேடையைப் பயன்படுத்தகூடாது

கேள்வி; சங்க உறுப்பினரான டி.ராஜேந்தர் தேர்தலில் போட்டியிடக் கூடாதா?

பதில; வேண்டாம் எனக்கூறவில்லை.தயாரிப்பாளர்கள் தொழில் ரீதியாக பிரச்சினைகளை எதிர்கொள்வது அதிகமாகதிரைப்படவிநியோகஸ்தர்களுடன்தான். அந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பில் தற்போது டி.ஆர்இருக்கிறார்.அந்தப் பொறுப்பில் இருந்து விலகிவிட்டு இங்கு தேர்தலில் போட்டியிடலாம். ஒரே நேரத்தில் இரட்டைக்குதிரைகளில் சவாரி செய்வது இருதரப்புக்குமே ஆபத்தாக முடியும் – அவர் மீதான நம்பகதன்மை விமர்சனத்துக்குள்ளாகும்.

கேள்வி; விபிஎப் பற்றிய தெளிவான முடிவினை எந்த சங்கமும் கூறவில்லையே?

பதில் ; தயாரிப்பாளர்கள் பல கூறுகளாகப் பிரிந்து இருப்பதால் இப்படி ஒரு கேள்வி வருகிறது தியேட்டர் உரிமையாளர்களும், டிஜிட்டல் நிறுவனங்களும் கூட்டு கொள்ளை நடத்திவந்தது அம்பலத்திற்கு வந்துவிட்டது தேர்தல் முடிந்தபின் விபிஎப் கட்டணத்தை முற்றிலுமாக ஒழிக்க முயற்சிப்போம் அதற்காக எந்தத்தியாகத்தையும் செய்ய நாங்கள் தயாராக உள்ளோம்.விபிஎப் கட்டணம் அறவே ரத்து செய்யும் நிலையில் தயாரிப்பாளர்கள் சங்கநிதி நிலை பலப்பட வாய்ப்பு உண்டு

கேள்வி; விபிஎப் கட்டணத்துக்கும் சங்கநிதி ஆதாராத்திற்கும் என்ன தொடர்பு ?

பதில் ; ஒவ்வொரு வருடமும் சுமார் 200 கோடி ரூபாய் டிஜிட்டல் புரவைடர்களுக்கு தயாரிப்பாளர்கள் மூலம் வருமானமாக்க் கிடைக்கிறது. இதனை முழுமையாக ரத்து செய்கிறபோது தயாரிப்பாளர்களிடம் குறைந்தபட்சம் 5% சங்க அறக்கட்டளைக்கு சேவைக் கட்டணமாக பெற்றாலே 10 கோடி ரூபாய் கிடைக்கும். பிற வணிக ரீதியான வருவாய்மூலம் 20 கோடி ரூபாய் கிடைக்கும் திட்டமும் உடனடியாக அமுல்படுத்தப்பட உள்ளது.

– ராம்

Related Posts