புதியபாதையில் சுசீந்திரன் – படப்பிடிப்பு இன்று தொடக்கம்
சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சத்யராஜ், பாரதிராஜா உள்ளிட்டோர் இணைந்து நடிக்கும் புதியபடம் ‘வள்ளி மயில்’.தெலுங்கில் பெரும் வெற்றி பெற்ற ‘ஜாதி ரத்னலு’ திரைப்படத்தில் நாயகியாக நடித்து வரவேற்பைப் பெற்ற ஃபரியா அப்துல்லா ( Faria Abdullah ) வள்ளி மயிலாக நடிக்கிறார்.
இவர்களோடு ‘புஷ்பா’ புகழ் சுனில், தம்பி ராமையா, ரெடின் கிங்ஸ்லி, சிங்கம் புலி, மனிஷா யாதவ், அறந்தாங்கி நிஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
டி.இமான் இசையமைக்கும் இந்தப்படத்துக்கு விஜய் கே.சக்ரவர்த்தி ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்தப்படத்தை நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தாய் சரவணன் தயாரிக்கிறார்.
1980 கால கட்டங்களில் நடக்கும் கதை. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள்.
இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் இன்று தொடங்கியது. காலை ஆறரை மணிக்கு முதல்காட்சி படமாக்கப்பட்டது.
தமிழ்மண் சார்ந்தும் மனித உணர்வுகளை மையப்படுத்தியும் படமெடுத்து வந்த சுசீந்திரன், ஐந்து மொழிகளில் வெளியிடுவதற்கு ஏற்ற கதைக்களம் மற்றும் நடிகர்களைத் தேர்வு செய்து புதியபாதையில் பயணத்தைத் தொடங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.