சினிமா செய்திகள்

சூர்யா 39 படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பு முடிவானது

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஜாக்கி ஷெராஃப், மோகன் பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சூரரைப் போற்று’. 2 டி நிறுவனமும், குனீத் மோங்காவும் இணைந்து தயாரித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

இந்தப் படத்துக்குப் பிறகு சிவா இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு, ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்துக்குத் தேதிகள் கொடுத்திருந்தார் சூர்யா. ஆனால் இயக்குநர் சிவா, ரஜினி படம் பண்ணுவதால், சூர்யா – சிவா கூட்டணி படம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இதனால் சூர்யாவின் அடுத்த படத்தின் இயக்குநர் யார் என்பது தெரியாமல் இருந்தது. இயக்குநர்கள் பாலா, ஹரி உள்ளிட்டோர் சூர்யாவைச் சந்தித்துப் பேசியுள்ளனர். இருவருமே தங்களுடைய கதை விவாதத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இருவரில் ஒருவரது படம் உடனடியாக தொடங்கப்படும் என்று சொல்லப்பட்டது.

இப்போது ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருப்பது உறுதியாகிவிட்டதாம். இப்படத்தை சூர்யாவின் 2 டி நிறுவனமே தயாரிக்கவிருக்கிறதாம்.

இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வருமென்கிறார்கள்.

Related Posts