அலட்டிய ஹிப்ஹாப்தமிழா ஆதி அதிரடி காட்டிய சுந்தர்.சி
தனிப்பட்ட இசைத்தொகுப்புகள் உருவாக்கம் திரையில் சில திரைப்படங்களில் பாடல்கள் பாடுவது என்றிருந்த ஹிப்ஹாப்தமிழா ஆதியை முழுநீளத் திரைப்படங்களுக்கு இசையமைப்பாளராக்கியவர் சுந்தர்.சி.
அவர் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளியான படம் ஆம்பள. விஷால்,ஹன்சிகா உள்ளிட்ட பலர் நடித்த அந்தப்படத்துக்கு ஹிப்ஹாப்தமிழாஆதியை இசையமைப்பாளராக்கினார் சுந்தர்.சி.
அதோடு படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் காட்சியில் விஷால், ஹன்சிகா ஆகியோரோடு திரையில் தோன்றும் வாய்ப்பையும் அளித்திருந்தார்.
அதன்பின் சுந்தர்.சி இயக்கிய அரண்மனை 2, கலகலப்பு 2, வந்தா ராஜாவாதான் வருவேன், ஆக்ஷன் ஆகிய எல்லாப்படங்களுக்கும் ஹிப்ஹாப்தமிழா ஆதிதான் இசை.
இவை மட்டுமின்றி, ஹிப்ஹாப்தமிழா ஆதி கதைநாயகனாக நடித்த மீசைய முறுக்கு, நட்பே துணை ஆகிய இரு படங்களைத் தொடர்ந்து தற்போது தயாரிப்பில் இருக்கும் நான் சிரித்தால் ஆகிய படங்களைத் தயாரித்ததும் சுந்தர்.சி தான்.
ஹிப்ஹாப்தமிழாஆதிக்கு இவ்வளவு வாய்ப்புகளைக் கொடுத்த சுந்தர்.சி யிடமே முரண்பட்டுக் கொண்டாராம் ஹிஹாப்தமிழா.
இப்போது தயாராகும் நான் சிரித்தால் பட உருவாக்கத்தில் அவர் சுந்தர்.சியை மதிக்கவே இல்லை என்று சொல்லப்படுகிறது.எனக்கு எல்லாம் தெரியும் என்று ரொம்பவே அலட்டிக் கொண்டாராம். இதனால் சுந்தர்.சி மிகவும் நொந்துபோய்விட்டாராம்.
இந்நிலையில் சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை 3 படம் விரைவில் தொடங்கவிருக்கிறது. இந்தப்படத்துக்கும் ஹிப்ஹாப்தமிழா ஆதி இசையமைக்கட்டும் என்று பெருந்தன்மையாகச் சொன்னாராம் சுந்தர்.சி.
ஆனால் அவருடைய உதவியாளர்கள் உள்ளிட்ட படக்குழுவினர் எல்லோருமே, இவ்வளவு நன்றி கெட்ட ஹிப்ஹாப்தமிழாவுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கக்கூடாது என்று அழுத்தமாகச் சொன்னார்களாம்.
இதனால், அரண்மனை 3 படத்துக்கு ஹிப்ஹாப்தமிழாஆதி வேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டாராம் சுந்தர்.சி,அவருக்குப் பதிலாக ஏற்கெனவே அவருடைய தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் பணியாற்றிய சத்யாவையே இசையமைப்பாளராக்கிவிட்டாராம்.