Uncategorized

உதயநிதி முன்னிலையில் சுபாஸ்கரன் கமல் சமரசம்

விக்ரம் படத்தைத் தொடர்ந்து கமல் நடிக்கவிருக்கும் படம் குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை.

அடுத்து மலையாள இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் அவர் நடிக்கவிருக்கிறார் என்பது உறுதியாகியிருக்கிறது.

இந்தப்படத்தையும் ராஜ்கமல் நிறுவனமே தயாரிக்கவிருப்பதாகவும் சொல்லப்பட்டது. இப்போது அதில் மாற்றம் நடந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

டான் படத்தின் வெற்றிவிழாவில் கலந்து கொள்வதற்காக லைகா நிறுவனர் சுபாஸ்கரன் சென்னை வந்திருந்தார். அப்போது கமல் பற்றிய சிக்கல்கள் சம்பந்தமான பேச்சுவார்த்தை உதயநிதி முன்னிலையில் நடந்ததாம்.

பேச்சுவார்த்தையில், இந்தியன் 2 படத்தை முடித்துத் தரவேண்டும் என்கிற லைகாவின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதோடு அதை உடனடியாகச் செய்துதரவும் ஒப்புக்கொள்ளப்பட்டதாம்.

அதோடு, முதலில் சபாஷ்நாயுடு அதன்பின் தலைவன் இருக்கிறான் ஆகிய படங்களைக் காரணமாகக் காட்டி சுமார் அறுபதுகோடி தொகையை லைகா நிறுவனத்திடமிருந்து பெற்றிருக்கிறார் கமல்.

அந்தப்பணத்துக்கு என்ன பதில்? என்கிற கேள்வி வந்தபோது, இப்போது மகேஷ் நாராயணன் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் புதியபடத்தை முதல்பிரதி அடிப்படையில் தயாரித்து லைகா நிறுவனத்திடம் கொடுத்துவிடுவதாகக் கமல் தரப்பில் உறுதியளிக்கப்பட்டதாம்.

இதை அனைவரும் ஒப்புக்கொண்டனர் என்றும் சொல்லப்படுகிறது. குறிப்பாகக் கமல் மீதிருந்த கோபத்தை மறந்து சுபாஸ்கரனும் ஒப்புக்கொண்டார் என்கிறார்கள்.

இதனால்தான், டான் வெற்றிவிழாவில், விரைவில் இந்தியன் 2 படம் வெளியாகும் என்று பேசியிருக்கிறார் உதயநிதி.

Related Posts