தெலுங்கு நடிகர் மீது புதிய குற்றச்சாட்டு – மீண்டும் பரபரப்பை கிளப்பும் ஸ்ரீரெட்டி
தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார்.தெலுங்கு மட்டுமின்றி தமிழ்த் திரையுலகிலும் சிலர் மீது குற்றம் சுமத்தினார்.
கொஞ்சகாலம் அமைதியாக இருந்த அவர், இப்போது தெலுங்கு நடிகர் சங்கத் தலைவர் சிவாஜிராஜா மீது ஊழல் புகார்களை வெளியிட்டு உள்ளார்.
இதுகுறித்து தனது முகநூலில் அவர் கூறியிருப்பதாவது:–
தெலுங்கு நடிகர் சங்கத் தலைவர் சிவாஜிராஜா தரகர் போல் செயல்படுகிறார். எனக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளைச் சொல்ல நடிகர் சங்கத்தின் கதவைத் தட்டினேன். ஆனால் அவர் கண்டுகொள்ளவில்லை. விளம்பரத்துக்காக பாலியல் குற்றச்சாட்டுகளைக் கூறி நான் நடிக்கிறேன் என்று கேவலமாகப் பேசினார்.
என் பாவம் அவரைச் சும்மா விடாது. நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் வயதான நடிகர்களுக்கு முதியோர் இல்லம் கட்டுவதற்காக அமெரிக்காவில் நிதி திரட்டினார்கள். அந்தப் பணத்தைச் சிலருடன் சேர்ந்து அவர் தின்று விட்டார். ஒரு முன்னணி நடிகருக்கும் வசூலான அந்தப் பணத்தில் இருந்து பெரிய தொகை போய் இருக்கிறது.
பாலியல் புகாரில் சிக்கிய நடிகர்களின் குடும்பங்களுக்கு ஆதரவாக செயல்பட்டார். இதற்காகப் பல கோடிகள் எனக்குத் தருவதாகவும் பேரம் பேசினார். அந்தப் பணத்தை நான் வாங்கவில்லை. வயதான தனது தந்தை, தாயையே சிவாஜிராஜா கவனிக்கவில்லை. வயதான நடிகர்களுக்கு முதியோர் இல்லம் கட்டுவதாகப் பணம் வசூலித்து மோசடி செய்தது வெட்கக்கேடு
இவ்வாறு ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.
இதுவரை பாலியல் குற்றங்களை மட்டுமே சொல்லி வந்த ஸ்ரீரெட்டி இப்போது ஊழல் புகார் சொல்லியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.