அதிகச் சம்பளம் கேட்ட ரஜினி – லைகா நிறுவனம் செய்தது என்ன?
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் ரஜினி.அந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.
அந்தப்படத்துக்கு சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். அனிருத் இசையமைக்கவிருக்கிறார்.
நயன்தாரா நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கும் என்கிறார்கள்.
இந்தப்படத்தில் நடிப்பதற்காக தனது சம்பளத்தை உயர்த்திவிட்டாராம் ரஜினி.
ரஜினி நடித்த 2.ஓ. பேட்ட ஆகிய இரண்டு படங்களும் வெற்றி என்பதால் சம்பளத்தை உயர்த்தியிருக்கிறாராம்.
இதனால் முதலில் அதிர்ச்சியடைந்த தயாரிப்பு நிறுவனம், அதன்பின் ரஜினி கேட்ட சம்பளத்தைக் கொடுக்க ஒப்புக்கொண்டதாம்.
அதோடு நில்லாமல் ரஜினியின் சம்பளத்தைப் படப்பிடிப்பு தொடங்குமுன்பே கொடுத்துவிட்டார்களாம். அதுவும் ஒரே தவணையில் மொத்தத் தொகையையும் கொடுத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
அப்படி லைகா நிறுவனம் கொடுத்த தொகை எழுபது கோடி என்றும் சொல்லப்படுகிறது.